உள்நாட்டு விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிடவேண்டாம் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வன்முறையால் பாதிப்புக்குள்ளான காஷ்மீருக்கு 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், ஸ்ரீநகரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மற்றநாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிடக் கூடாது. பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டதாக கூறும் பாகிஸ்தான் காஷ்மீரில் வன்முறையை ஊக்கப்படுத்தகூடாது. காஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தான் தனது நிலைப்பாட்டை மாற்றிகொள்ள வேண்டும். பாகிஸ்தானின் அணுகு முறை மற்றும் மனப் போக்கை நெருக்கும் சக்தியாக ஜம்மு காஷ்மீர் மாற வேண்டும்.
பிரதமர் நரேந்திரமோடி காஷ்மீர் நிலை குறித்து பெரும்கவலை அடைந்துள்ளார். மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து அமைதியை கொண்டுவருவோம். இதில், "மூன்றாவது சக்தி" ஈடுபடுத்தவேண்டிய அவசியம் இல்லை,
பாதுகாப்பு படையினரை நிதானமாக இருக்கவேண்டும். அமைதி நிலவ மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இளைஞர்கள் வன்முறை சம்பவங்களில் ஈடுபடவேண்டாம் என கேட்டு கொள்கிறேன் என்றார்.
தேவைபட்டால் காயம் அடைந்தவர்கள் தில்லி மருத்துவ மனையில் அனுமதிக்கப்படுவர் என்று கூறினார்.காஷ்மீர் வனமுறையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தார் ராஜ்நாத் சிங்.
Related Posts:
- வளர்ச்சி அடைந்த ,செழிப்பான ஜம்முகாஷ்மீர் என்பதுதான்…
- பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டும்…
- முழு காஷ்மீரும் இந்தியாவுக்கு சொந்தம்: சீன 'டிவி'
- காஷ்மீர் ராகுல், ஒமர் கருத்துக்களை மேற்கொள் காட்டும் பாக்
- பாகிஸ்தானை தனிமைப்படுத்த சவுதி இளவரசருடன் பேச்சுவார்த்தை
- பாஜக வெற்றிபெற்றால் காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு