தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து மோடி செளகிதார் என்ற வார்த்தையை நீக்கி உள்ளார்.
மக்களவைத் தேர்தல தேதி அறிவிக்கப்பட்ட உடன் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் நரேந்திர மோடி என்ற பெயருக்கு முன்னர் ‘செளகிதார்’ (காவலாளி) என்ற வார்த்தையை சேர்த்தார். அவரை தொடர்ந்து பலரும் ‘செளகிதார்’ வார்த்தையை சேர்த்தனர்.
தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக வந்துள்ள நிலையில், மீண்டும்மோடி பதவி ஏற்க உள்ளார். இதையடுத்து செளகிதார் என்ற வார்த்தையை நீக்கிவிட்டு, “காவலாளி என்ற வார்த்தையின் உணர்வு இனி வேற லெவலுக்கு செல்ல உள்ளது.இந்தியாவுக்காக உழைப்பதில் காவளாலி என்ற உணர்வு எபோதும் என்னுடன் இருக்கும்.