அயோத்தி வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கினாலும், அந்த தீர்ப்பு யாருக்கும் வெற்றியோ, தோல்வியோ கிடையாது என பிரதமர் நரேந்திரமோடி பதிவிட்டுள்ளார். இந்த தீர்ப்பை நமது நீண்டநெடிய பாரம்பரியங்களான அமைதி, நல்லிணக்கம் மற்றும் நல்லெண்ணத்தை காக்க முன்னுரிமை அளித்துசெயல்பட அனைவரும் முன்வர வேண்டும் என நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.