முத்துபேட்டையில் விநாயகர் சிலை ஊர்வலம் வரும் 10ம் தேதி நடைபெற உள்ளது .
இதைதொடர்ந்து ஊர்வலம் துவங்கும் இடமான ஜாம்புவானோடை சிவன்கோயிலிலிருந்து ஊர்வலம் வரும் பாதை உள்ப்பட அனைத்து இடங்களையும் மத்திய மண்டல
ஐஜி பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார் .
அப்போது அவர் தெரிவித்ததாவது” கடந்த ஆண்டு ஊர்வலம் நடைபெற்ற பாதையிலேயே இந்தாண்டும் ஊர்வலம் நடைபெறும். இந்த முறை கூடுதலாக கண்காணிப்பு_கேமிராக்கள் பொருத்தபட்டு கண்காணிக்கபடவுள்ளது.
சுமார் 2 ஆயிரம் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபடவுள்ளனர். விநாயகர் ஊர்வலத்தை அமைதியாகநடத்த அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தர வேண்டும்” என்று தெரிவித்தார்
Tags; முத்துப்பேட்டை விநாயகர், சிலை ஊர்வலம், முத்துப்பேட்டை