மும்பை விமான நிலையத்திலிருந்து வெள்ளிக்கிழமை இரவு இரண்டு மணியளவில் மஸ்கட்டுக்கு ஜெட் ஏர்வேஸýக்கு சொந்தமான விமானம் 122 பயணிகளுடன் புறப்படத் தயாரானது.அந்த விமானத்துக்கு அனுமதிக்கப்பட்ட தளத்தில் ஏற்கெனவே கிங்பிஷர் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று விமான நிலையத்தில் சரக்குகளை இறக்கிக் கொண்டிருந்தது..
ஜெட் ஏர்வேஸ் ஓடத் தொடங்கியது. அப்போது அங்கு நின்று கொண்டிருந்த கிங் ஃபிஷர் விமானத்தின் வால் பகுதி மீது ஜெட் விமானத்தின் இடது பக்க இறக்கை உரசியது. இதனால் இரண்டு விமானங்களும் அதிர்ந்தது.விமானம் சற்று நெருக்கமாக மோதியிருந்தால், பெரிய விபத்து ஏற்பட்டு பயணிகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கும். .இதனை தொடர்நது ஜெட் விமானம் புறப்படுவது நிறுத்தி வைக்கபட்டு . பயணிகள் மற்றொரு விமானத்தில் மஸ்கட் அனுப்பி வைக்கப்பட்டனர்.