கறுப்புபணத்தை மீட்பது தொடர்பாக மத்திய அரசின் நடவடிக்கை குறித்து வெள்ளை_அறிக்கை வெளியிடபட வேண்டும் என்று திருவனந்தபுரத்தில் நடந்த பொதுகூட்டத்தில் பேசிய அத்வானி கோரிக்கை விடுத்தார்.
திருவனந்தபுரத்தில் நடந்த பொதுகூட்டத்தில் பேசியதாவது: வெளிநாட்டில் பதுக்கி வைக்கபட்டுள்ள கறுப்புபணத்தை மீட்க மத்திய
அரசு ஆர்வம்_காட்டவில்லை. அவர்கள் இதுகுறித்து எடுத்துவரும் நடவடிக்கை குறித்து வெள்ளையறிக்கை வெளியிடவேண்டும். சுவிஸ்வங்கியில் மட்டும் 25லட்சம்_கோடி ரூபாய் முடக்கி வைக்கபட்டுள்ளது. இவ்வளவு பெரியதொகையை இந்தியாவிற்கு கொண்டுவரும் பட்சத்தில் நாட்டில் இருக்கும் 6 லட்சம் கிராமங்களுக்கும் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முடியும் என்று கூறினார்.