உத்தரகண்ட்டில் நடைபெற்றுவரும் நிவாரண பணிகளை காங்கிரஸ்கட்சி அரசியலாக்கி வருவதாக பா.ஜ.க மூத்த தலைவர் வெங்கய்யநாயுடு குற்றம்சுமத்தியுள்ளார். .
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கனமழை மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள உத்தரகண்ட் மாநிலத்தில் பா.ஜ.க., ஆர்எஸ்எஸ். உள்ளிட்ட அமைப்புகள் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. நிவாரணப் பணிகளை பார்வையிட குஜராத் முதல்வர் நரேந்திரமோடி உத்தரகண்ட்சென்றதை காங்கிரஸ் எதிர்க்கிறது. இது என்ன காங்கிரஸ்க்கு சொந்தமான நாடா?
நிவாரண பணிகளைக்கூட காங்கிரஸ் அரசியலாக்கி வருகிறது. இது கண்டிக்க தக்கது என்றார் வெங்கய்ய நாயுடு.