அசோக் சிங்கால் உடலுக்கு பிரதமர் இறுதிமரியாதை செலுத்தினார்

 விஸ்வ ஹிந்துபரிஷத்தின் மூத்த தலைவர் மறைந்த அசோக் சிங்கால் உடலுக்கு பிரதமர் உட்பட அரசியல் தலைவர்கள் இறுதிமரியாதை செலுத்தினர்.

அசோக் சிங்காலுக்கு கடந்த 14-ந்தேதி உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து டெல்லி குர்கானில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று பிற்பகல் 2.24 மணிக்கு அசோக்சிங்கால் உயிர்பிரிந்தது. பின்னர் அசோக் சிங்கால் உடல் டெல்லி ஆர்எஸ்எஸ். தலைமைய கத்துக்கு கொண்டு வரப்பட்டு அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அசோக் சிங்காலின் உடலுக்கு இன்று பிரதமர் மோடி மலர்வளையம் வைத்து இறுதிமரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ், ராஜ்ய வர்தன் ரத்தோர் மற்றும் பாஜக. தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் இறுதிமரியாதை செலுத்தினர்.

டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள மோடி கூறியுள்ளதாவது:- அசோக்சிங்கால் மறைவு தனக்கு பேரிழப்பு. நாட்டின் வளர்ச்சி்க்காக தன் வாழ்க் கையையே அர்ப்பணித்தவர் . அசோக்சிங்கால் அவர்களின் வாழ்த்துக்களையும், வழிகாட்டுதல்களும் எனக்கு எப்போதும் கிடைத்தது அதிர்ஷ்ட வசமானது. அசோக் சிங்கால் குடும்பத்தினருக்கும் அவரது ஆதரவாள ர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...