அமைதிக்காக நோபல்பரிசு பெற்ற லீயோ ஷாவ்போவை விடுதலை செய்ய ஐ.நா. நெருக்கடிதர வேண்டும் என்று ஷிரின் எபாடி கூறியுள்ளார்.
கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்ட மற்றொரு நோபல்பரிசு வெற்றியாளர ஷிரின் எபாடி கூறியதாவது: லீயோ ஷாவ்போவை விடுதலை செய்ய தேவையான நடவடிக்கையை ஐ.நா. எடுக்கவேண்டும். மேலும், சீனாவுக்கு நெருக்கடி தர வேண்டும் என்றார். ஈரானைச்சேர்ந்த ஷிரின், கடந்த 2003 -ம் ஆண்டு அமைதிகான நோபல்பரிசை பெற்றவர்.
2010 -ம் ஆண்டின் அமைதிக்கான நோபல்பரிசு சீனாவை சேர்ந்த லீயோ ஷாவ்போவுகு வழங்கப்பட்டது. லீயோ சீனாவில் ஜனநாயகம் மலர போராடி வருகிறார். இதையடுத்து கடந்த ஆண்டு கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். அவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .
முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ... |
வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.