அமீர்கானின் கருத்து நாட்டிற்கு பெரிய இழுக்கு

 சகிப்பின்மை குறித்த நடிகர் அமீர்கானின் கருத்து நாட்டிற்கும் அவருக்கும் இழுக்கு தேடித்தந்துள்ளது என்று மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சர் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

"அமீர்கானின் கூற்று அவரது தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம், ஆனால் நாட்டிற்கு அக் கருத்து பெரிய அளவில் இழுக்கு தேடித்தந்துள்ளது. ஒரு பிரபலகலைஞர் இவ்வளவு தீவிரமான கருத்தை வெளியிடுகிறார் என்றால் இதனால் பலரும் புண் படுவதும், வருத்தமடைவதும் தவிர்க்க முடியாததே.

அவரது கூற்றை ஏற்க முடியாததற்கு காரணம், நம் நாடு சகிப்பு தன்மைக்கான வரலாறு கொண்டது. இன்றும் சகிப்புத்தன்மை உள்ளது. அமீர்கானின் கருத்து நாட்டிற்கும், ஏன் அவருக்குமேகூட இழுக்கு தேடித் தந்துள்ளது" என்றார்.

பாஜக எம்.பி மற்றும் இந்துத்துவா தலைவர் யோகி ஆதித்யா நாத், “இந்தியாவை விட்டு அவர் செல்வதை ஒருவரும் தடுக்கவில்லை. மேலும், நாட்டின் மக்கள்தொகையை குறைக்க இது உதவும்” என்று தெரிவித்தார்.

 ஸ்மிருதி இரானி தாக்கு: ""மத்திய அரசின் தூய்மைஇந்தியா திட்டத்தின் தூதராக ஆமீர் கான் இருக்கிறார். அவ்வாறு இருக்கும் போதே, அரசுக்கு எதிராக அவரால் கருத்துத்தெரிவிக்க முடிகிறது. அரசின் சகிப்புத் தன்மைக்கு இதனைவிட சிறந்த உதாரணம் வேறென்ன இருக்க முடியும்?'' என்றார்.

 இதேபோல், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, நடிகர்கள் ரிஷி கபூர், அனுபர்கெர் உள்ளிட்டோரும் ஆமிர்கானின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...