தீவிரவா தத்திற்கு எதிரான பிரதமர் மோடியின் எச்சரிக்கை காரணமாக அண்டைநாடுகளால் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப் பட்டுள்ளது என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் 70வது சுதந்திரதினத்தின் போது செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி, தீவிரவாதத்திற்கு ஆதரவாகசெயல்படும் பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார். தீவிரவாதத்திற்கு இந்தியா ஒருபோதும் அடி பணியாது என்றும் அவர் சவால் விடுத்தார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு குஜராத்தில் உள்ள கேதாமாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கலந்து கொண்டு பேசுகையில், தீவிரவாதத்திற்கு எதிரான பிரதமர் மோடியின் உறுதியான நடவடிக்கையால், அண்டைநாடுகளால் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி மற்றும் படேலின் கொள்கைகளை பிரதமர் உயர்த்திபிடித்து வருகிறார். தீவிரவாதம், பிரிவினை வாதத்திற்கு எதிராக மென்மையான அணுகுமுறை என்பதேகிடையாது. இன்றைக்கு தீவிரவாதத்தை ஆதரித்து வரும் பாகிஸ்தான் சர்வதேச நாடுகளால் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் தேசியபாதுகாப்பு மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரான உறுதியான கொள்கையே இதற்கு முக்கியகாரணம்.
உலகத்திற்கே இந்தியா தலைமைதாங்கி நடத்துவதற்கான திசையை நோக்கி நாட்டை பிரதமர்மோடி வழிநடத்தி செல்கிறார். ஏழைகளின் மேம்பாடு என்ற காந்தியின் கொள்கை, தேசத்தின் ஒருமைப்பாடு என்ற படேலின் கொள்கையை ஒன்றாக கொண்டது தான் மோடியின் கொள்கை. பிரதமர் மோடி முதல்வராக இருந்தபோது குஜராத்தின் வளர்ச்சி ஒரு மாடலாக தற்போது பேசப்பட்டு வருகிறது என்றார்.
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ... |
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |
Leave a Reply
You must be logged in to post a comment.