பல்வேறு துறைகளில் பொதுமக்கள் அனுப்பிய 93 ஆயிரம் புகார்களுக்கு, ஒருமாத காலத்துக்குள் தீர்வு வழங்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து, மத்திய பணியாளர் மற்றும் பொதுமக்கள் குறைதீர்வு துறை இணையமைச்சர் ஜிதேந்திரசிங் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும், 1 லட்சத்து, 903 புகார்கள் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்டன. அதில், 93,379 அதாவது, 93 சதவீத மனுக்கள் ஒரு மாதத்துக்குள் தீர்த்துவைக்கப்பட்டன.
கடந்த 2 ஆண்டுகளாக புகார்மனுக்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. அரசிடம் வழங்கும் மனுக்களால் தீர்வுகிடைக்கும் என்ற பொதுமக்களின் நம்பிக்கையையே இதுகாட்டுகிறது.
கடந்த 2014-ம் ஆண்டில், 2,70,255 மனுக்கள் பெறப்பட்டன. இதுவே கடந்தாண்டு 8,81,132 மனுக்களாக அதிகரித்துள்ளது. 2012-ம் ஆண்டில், 1,76,126 மனுக்கள் மட்டுமே பெறப்பட்டன.
தற்போது செயல்படுத்தப்படும் புதிய நடைமுறைகளின்படி, புகார்களின் உண்மைத் தன்மையை சோதிக்க, விளக்கங்கள் பெற, களநிலவரத்தை தெரிந்துகொள்ள உடனுக்குடன் தொலைபேசி மூலமாகவே தொடர்பு கொண்டு விடுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ... |
முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ... |
காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.