தமிழகத்தில் மீனவர்கள் பிரச்னை குறித்து அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும்

தமிழகத்தில் மீனவர்கள் பிரச்னை குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும் என பாரதிய ஜனதா தேசிய செயலாளர் முரளிதர்ராவ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து சென்னையில் முரளிதர்ராவ் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசியதாவது : இந்தியாவில் ஜவுளி, விவசாயம், மீன்பிடித்தல் ஆகியவை முக்கிய தொழிலாகும். இந்தியாவில் சுமார் 8 ஆயிரம் கிலோ மீட்டார் . நீளத்துக்கு கடற்கரையும், சுமார் 3,200 மீனவ கிராமங்களும் இருக்கின்றன . 2 கோடி மக்கலின் வாழ்க்கை மீன்பிடி தொழிலை நம்பியுள்ளது . இத் தொழில் மூலம் அரசுக்கு 36 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கிறது. வெளி-நாடுகளுக்கு 8 ஆயிரம்கோடி அளவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மீன்பிடித்தல் இப்போது பல சவால்களை சந்தித்து வருகிறது. சுனாமிக்குப் பிறகு ஏற்பட்டுள்ள பருவ-நிலை மாற்றதின் காரணமாக மீனவர்கள் அடிக்கடி கடலுக்கு செல்ல இயலவில்லை.

இது-போன்ற மீனவர் பிரச்னைகளை நேரில் அறிவதற்காக பாரதிய ஜனதா நிர்வாகிகள் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக விழுப்புரம், ராமநாதபுரம், புதுச்சேரியில் இருக்கும் சில மீனவர் கிராமங்களுக்கு நேரில் சென்று நான் மீனவர்களின் பிரச்னைகளை கேட்டறிந்தேன். தமிழகத்தில் மீனவர்கள் அதிகமாக பாதிக்க பட்டுள்ளனர். மண்ணெண்ணெய், டீசல், படகு, வலை ஆகியவற்றின் விலை உயர்வு அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. கடந்த 2 நாள்களாக மீனவர்களுக்கு வருமானமே இல்லை. ஜல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் மீனவர் கிராமங்களில் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. இலங்கை கடற்படையினர் அடிக்கடி தாக்குதல் நடத்துவது மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது.

எனவே மீனவர் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும் என்றார் முரளிதர் ராவ். தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...