கேரளா அதிகரிக்கும் பாஜக.,வினர் மீதான தாக்குதல்

கேரளாவில் தற்போது ஆளுங்கட்சியாக கம்யூனிஸ்டுகட்சி உள்ளது. எதிர்கட்சியாக காங்கிரஸ் செயல்பட்டுவருகிறது. பா.ஜ.க ஒரு எம்.எல்.ஏ.வுடன் கேரள அரசியலில் கால்ஊன்றி உள்ளது.

இந்தநிலையில் சமீபகாலமாக கம்யூனிஸ்டு  பா.ஜ.க வினர் மீதான தாக்குதல் அதிகரித்து  வருகிறது. இதில் பலர் கொலையுண்டு உள்ளனர். இந்த அரசியல் தாக்குதல் கேரள பொதுமக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தி வருகிறது.

இந்தநிலையில் கடந்த சிலநாட்களுக்கு முன்பு திருவனந்தபுரம் அருகே காஞ்சிரக்கோடு பாலையார் என்ற இடத்தில் கம்யூனிஸ்டு கட்சியினருக்கும் பாரதிய ஜனதா கட்சியினருக்கும் இடையேமோதல் ஏற்பட்டது.

அப்போது ஏற்பட்ட வன்முறையில் அந்த பகுதியை சேர்ந்த பா.ஜனதா மகளிர் அணிபொறுப்பாளர் விமலா தேவி (வயது 38) என்பவர் வீட்டிற்கு கம்யூனிஸ்டு தொண்டர்களால் தீவைக்கப்பட்டது. இதில் வீட்டில்இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து விமலாதேவியும் அவரது கணவர் மணியும் படுகாயம் அடைந்தனர்.

அந்த பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர்களில் விமலாதேவி சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்துபோனார்.

இந்த தகவல் கிடைத்ததும் பாஜக எம்.எல்.ஏ. ராஜகோபால் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் ஆஸ்பத்திரியில் திரண்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை உருவானது. உடனடியாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

விமலாதேவி மரணத்தை தொடர்ந்து இன்று பாலையார் பகுதியில் முழு அடைப்புபோராட்டத்திற்கு பாரதிய ஜனதா அழைப்பு விடுத்தது. விமலாதேவி மரணத்தைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆர்.எஸ்.எஸ். கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...