பாஜக மூத்த தலைவர் எல்கே.அத்வானி சனிக் கிழமை கோவை வருகை

பாஜக மூத்த தலைவர் எல்கே.அத்வானி சனிக் கிழமை கோவை வந்தார்.கோவை அருகே உள்ள ஈஷாயோக மையத்தில் 112 அடி உயரம்கொண்ட ஆதியோகி சிவன் சிலை திறப்பு விழா வெள்ளிக் கிழமை நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திரமோடி, தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பலர்பங்கேற்றனர்.


இந்நிலையில், ஈஷாயோக மையத்தில் 2 நாள் தங்குவதற்காக அத்வானி விமானம் மூலம் சனிக் கிழமை மாலை 5 மணி அளவில் கோவைவந்தார். அங்கு அவரை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக தேசியச்செயலர் ஹெச்.ராஜா, மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இதன் பின்னர், அவர் கார்மூலம் பலத்த பாதுகாப்புடன் ஈஷாயோக மையம் சென்றடைந்தார். அத்வானியுடன், அவரது மகள் பிரதீபா, குடும்பமருத்துவர், நண்பர், பாதுகாவலர் உள்ளிட்ட 5 பேர் கோவை வந்தனர். அத்வானியின் வருகையை ஒட்டி, அவிநாசி சாலை, திருச்சிசாலை, பேரூர் சாலை, ஆலாந்துறை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் காவல் துறையினர் சனிக் கிழமை காலை முதலே பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர்.
அவர் கோவையிலிருந்து திங்கள்கிழமை மாலை புது தில்லி செல்ல உள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...