மூங்கில் மரங்களை வளர்க்க, தமிழக அரசு ஊக்குவிக்கவேண்டும்

வெளிநாடுகளில் இருந்து வாங்கப்படும் மூங்கில்குச்சிகளை நிறுத்திவிட்டு, தமிழகத்தில் மூங்கில் மரங்களை வளர்க்க, தமிழக அரசு ஊக்குவிக்கவேண்டும்,'' என, மத்திய இணை அமைச்சர் கிரிராஜ் சிங் கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் பேஸ்: 2 பகுதியில் உள்ள தனியார்கம்பெனியில், முள் இல்லா மூங்கில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஒருநாளைக்கு, ஒன்றரை அடி உயரம்வரை வளரும் இந்த மூங்கில் மரங்கள் குறித்து ஆய்வுமேற்கொள்ள, குறு, சிறு, நடுத்தர தொழில்துறை அமைச்சகத்தின் மத்திய இணை அமைச்சர் கிரிராஜ் சிங் ஓசூர் வந்தார்.

அப்போது அவர், நிருபர்களிடம் கூறியதாவது: சீனா, வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து, ஊதுபத்திகளை தயாரிக்க தேவையான மூங்கில்குச்சிகளை, 60 சதவீதம்வரை, இறக்குமதி செய்கிறோம். இந்தியாவில் ஊதுபத்திகளுக்கான தேவை அதிகமாக உள்ளதால், மூங்கில்குச்சி இறக்குமதியை நிறுத்திவிட்டு, மூங்கில் மரங்களை விவசாயிகள் வளர்க்க தமிழக அரசு ஊக்கப்படுத்தவேண்டும். சிறு, குறு தொழில்கள் துவங்க, வங்கிகளில் உத்தரவாதம் இல்லாமல் வழங்கப்பட்டுவந்த, ஒரு கோடி ரூபாயை, பிரதமர் மோடி, இரண்டு கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளார். சிறு, குறுந் தொழிற்சாலைகள் வளர்ச்சியில் தமிழகம் முன்னிலையில்தான் உள்ளது. மானியம், சட்ட பாதுகாப்பு, கடன் உதவி உள்ளிட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய முக்கிய அம்சங்களை, மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...