காஞ்சிபுரம் மாவட்ட தே மு தி க சார்பில், பக்ரீத் குர்பானி வழங்கும் விழாநடந்தது. அதில் தலைவர் விஜயகாந்த் பேசியதாவது
பக்ரீத் பண்டிகை நோக்கமே இருக்கிறவர்கள் இல்லாதவருக்கு கொடுக்கணும் என்பது. அதை நான் பின்பற்றி வருகிறேன். நான் பேசினால் திமுக,விற்கு கோபம் வருது. உலக அளவில் இது-வரை இல்லாத அளவிற்கு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூ ஊழல் நடந்துள்ளதாக கூறிய குற்றசாட்டின் பேரில் ராஜா பதவியை ராஜினாமா செய்து உள்ளார். ஊழல் செய்ததன்மூலம் கிடைத்த பணத்தை திரும்பக் கொடுக்கனும் ஏனென்றல் அது மக்களின்-வரி பணம். ராஜினாமாவிற்கு பிறகு சென்னைத் திரும்பிய ராஜாவை வரவேற்க தி மு க.வினர் விமான நிலையத்திற்கு சென்றுள்ளனர். காவிரியில் தண்ணீர் விடாததை கண்டித்து அவர் என்ன ராஜினாமா செய்தாரா, பாலாற்றின்-குறுக்கே அணைக் கட்டுவதை எதிர்த்து பதவியை ராஜினாமா செய்தாரா, முல்லை பெரியாறு பிரச்னைக்கு ராஜினாமா செய்தாரா, இலங்கை தமிழர் மறுவாழ்விற்கு ராஜினாமா செய்தாரா?
புதிதாகக் கட்சி ஆரம்பித்தவருக்கு முதல்வர் பதவி-மீது ஆசை என்கிறார் துணை-முதல்வர் ஸ்டாலின. நீங்கள் என் துணை-முதல்வராக ஆசை படவில்லையா? ஆசை படவில்லை என்றால் பதவியை கோ.சி.மணிக்கோ,அன்பழகனுக்கோ, ஆற்காடு வீராசாமிகோ கொடுத்திருக்கலாமே. இல்லையென்றால் மூத்தவர் அழகிரிக்காவது கொடுத்து இருக்கலாமே. உங்களுக்கு ஆசை இருக்கலாம், எனக்கு ஆசை இருக்கக் கூடாதா? .இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.