ஊழல் செய்ததன்மூலம் கிடைத்த பணத்தை திரும்பக் கொடுக்கனும்; விஜயகாந்த்

காஞ்சிபுரம் மாவட்ட தே மு தி க சார்பில், பக்ரீத் குர்பானி வழங்கும் விழாநடந்தது. அதில் தலைவர் விஜயகாந்த் பேசியதாவது

பக்ரீத் பண்டிகை நோக்கமே இருக்கிறவர்கள் இல்லாதவருக்கு கொடுக்கணும் என்பது. அதை நான் பின்பற்றி வருகிறேன். நான் பேசினால் திமுக,விற்கு கோபம் வருது. உலக அளவில் இது-வரை இல்லாத அளவிற்கு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூ ஊழல் நடந்துள்ளதாக கூறிய குற்றசாட்டின் பேரில் ராஜா பதவியை ராஜினாமா செய்து உள்ளார். ஊழல் செய்ததன்மூலம் கிடைத்த பணத்தை திரும்பக் கொடுக்கனும் ஏனென்றல் அது மக்களின்-வரி பணம். ராஜினாமாவிற்கு பிறகு சென்னைத் திரும்பிய ராஜாவை வரவேற்க தி மு க.வினர் விமான நிலையத்திற்கு சென்றுள்ளனர். காவிரியில் தண்ணீர் விடாததை கண்டித்து அவர் என்ன ராஜினாமா செய்தாரா, பாலாற்றின்-குறுக்கே அணைக் கட்டுவதை எதிர்த்து பதவியை ராஜினாமா செய்தாரா, முல்லை பெரியாறு பிரச்னைக்கு ராஜினாமா செய்தாரா, இலங்கை தமிழர் மறுவாழ்விற்கு ராஜினாமா செய்தாரா?

புதிதாகக் கட்சி ஆரம்பித்தவருக்கு முதல்வர் பதவி-மீது ஆசை என்கிறார் துணை-முதல்வர் ஸ்டாலின. நீங்கள் என் துணை-முதல்வராக ஆசை படவில்லையா? ஆசை படவில்லை என்றால் பதவியை கோ.சி.மணிக்கோ,அன்பழகனுக்கோ, ஆற்காடு வீராசாமிகோ கொடுத்திருக்கலாமே. இல்லையென்றால் மூத்தவர் அழகிரிக்காவது கொடுத்து இருக்கலாமே. உங்களுக்கு ஆசை இருக்கலாம், எனக்கு ஆசை இருக்கக் கூடாதா? .இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...