தில்லாலங்கடி ப.சிதம்பரம்….!

செப்டம்பர் 2015 இல் திரு.குருமூர்த்தி அவர்கள் Indian Express இல் எழுதிய கட்டுரையை தமிழாக்கம் செய்து அப்பொழுதே  போட்டிருந்தேன்.

இந்தனை திருட்டுகளுக்கும் சேதாரமில்லாத ஆதாரம் சேகரிக்க மத்திய அரசுக்கு இத்தனை நாட்கள் வேண்டியிருந்தது. அப்படியேற்பட்ட தில்லாலங்கடி தான் நம்ம ஊர் ப.சிதம்பரம்….!

ஏர்செல் – மேக்ஸிஸ் மூலக் கதை. கார்த்திக் சிதம்பரத்தின் திருட்டுப் பணப் பரிவர்த்தனைகள்…..!

ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் தன்னுடைய கம்பெனி மூலம் (Advantage Strategic Consulting Company) செய்த தில்லு முல்லுகள், மற்றும் வாங்கிக் குவித்த சொத்து விவரங்கள், ஏற்படுத்திக் கொண்ட சாம்ராஜ்யங்கள்.

ஏர்செல் – மேக்ஸிஸ் ஊழலில், அமலாக்கப்பிரிவும், வருமான வரித்துறையும் சேர்ந்து நடத்திய விசாரணையில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்தின் தனிப்பட்ட சாம்ராஜ்யத்தின் சொத்து நிலவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலகின் பல பாகங்களிலும் அதாவது மொத்தம் 14 நாடுகளில் – லண்டன், துபாய், சவுத் ஆப்ரிக்கா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, ஸ்ரீலங்கா, பிரிட்டிஷ் வெர்ஜின் தீவு, பிரான்ஸ், அமெரிக்கா, சுவிசர்லாந்து, கிரீஸ், ஸ்பெயின்….. அப்ப்ப்பாஆஆஆ….. முதலிய நாடுகளில் ரியல் எஸ்டேட் போன்ற தொழில்களில் முறைகேடாக பணம் முதலீடு செய்துள்ளார்.

கார்த்திக் சிதம்பரத்தின் சொத்து சம்பந்தப்பட்ட ஆவணங்கள் இவரின் நுங்கம்பாக்கம் கம்பெனியை (Advantage Strategic Consulting Company) சமீபகாலத்தில் ரெய்டு செய்தபோது இவரின் கம்பெனிக்கும் ஏர்செல் – மேக்ஸிஸ் கம்பெனிக்கும் உள்ள தொடர்பும் வெளிவந்துள்ளது.

இதில் பெரும்பான்மையான முதலீடுகள் கார்த்திக் சிதம்பரத்தின் சிங்கப்பூர் துணை நிறுவனத்தின் மூலமாகவே நடத்தப்பட்டுள்ளது.

அமலாக்கப்பிரிவு – வருமான வரித்துறையின் விசாரணையாளர்கள் தற்போது மேலே கூறியுள்ள 14 நாடுகளிலிருந்தும் மேற்கொண்டு பல விஷயங்களைத் தருவிக்க ஏற்பாடு செய்துள்ளனர். UN மூலம் மேலும் இந்தப் பணப் பரிவர்தனைகளைத் தடுக்கவும் ஏற்பாடு நடக்கிறது.

2G கோர்ட், ஏற்கனவே கார்த்திக் சிதம்பரத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கம்பெனிகளின் பணப் பரிவர்த்தனைகளைப் பகிர்ந்து கொடுக்கும்படி சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.

கார்த்திக் சிதம்பரத்தின் கம்பெனியில் நடந்த ரெயிட் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட, தெரிந்த, வெளிவந்துள்ள…… சில திருட்டுப் புரட்டுகள் :

2006 – 2011 ஆம் ஆண்டுகளில் மட்டுமே கார்த்திக் சிதம்பரம் பெரிய அளவுகளில் சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளார். அந்த நேரத்தில் தான் ப.சிதம்பரம் இந்தியாவின் நிதி மந்திரியாகவும், உள்துறை அமைச்சராகவும் இருந்திருக்கிறார்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள அத்தனைப் பட்டியலும் கார்த்திக் சிதம்பரத்தின் சிங்கப்பூர் கம்பெனி மூலம் வாங்கியது !!!!

1) 88 ஏக்கர் விவசாய நிலம் செப்டம்பர் 2011 இல் ஒரு மில்லியன் பவுண்டுக்கு லண்டனில் வாங்கியுள்ளார்.
2) ஸ்ரீலங்காவில் உள்ள மிகப் பெரிய ரிசார்ட்டின் பெரும் பகுதியான ஷேர்கள் வாங்கியுள்ளார். இந்த ஸ்ரீலங்கா கம்பெனி பெருமை வாய்ந்த பிரம்மாண்டமான ஹோட்டல்களின் உரிமையாளர்கள்.
3) இந்த இரண்டு கம்பெனிகளுக்கும் உள்ள பல அக்ரிமெண்ட் பேப்பர்களையும் அமலாக்கப்பிரிவு கண்டுபிடித்துள்ளது.
4) துபாய் வழியாக பணத்தை அனுப்பி சவுத் ஆப்ரிக்காவில் மூன்று விளை நிலங்களை வாங்கியுள்ளார்.
5) தனிப்பட்ட முறையிலும் சவுத் ஆப்ரிக்காவிலும் பணப் பரிவர்த்தனை நடந்துள்ளது. (Nicholls Steyn And Associates).

6) துபாயில் உள்ள (Desert Dunes Properties Ltd ) கம்பெனியில் முதலீடு செய்துள்ளார்.
7) இது தவிர இந்த இரண்டு கம்பெனிகளுக்கும் இடையில் 1.7 மில்லியன் சிங்கப்பூர் டாலர்கள் பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது.
8) மற்றுமொரு கம்பெனியான Pearl Dubai FX LLC என்கிற துபாய் நிறுவனத்துடன் பணமாற்றம் நடந்துள்ளதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
9) கார்த்திக் சிதம்பரம் பிலிப்பைன்ஸ் நாட்டைத் தலைமையிடமாகக் கொண்ட நிறுவனத்துடன் கூட்டு முயற்சி மேற்கொண்டு ஆசிய இன்டர்நேஷனல் பிரீமியர் டென்னிஸ் லீக் (Asia) கில் பிரான்சைஸ் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளார்.
10) இவர் தன் நிறுவனம் ஒன்றின் பிரிவை பிரிட்டிஷ் வெர்ஜின் தீவில் நிறுவியுள்ளார்.

11) 400000 சிங்கப்பூர் டாலரை மற்றுமொரு பிரிட்டிஷ் வெர்ஜின் தீவில் உள்ள நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். (Full Innovation Ltd)
12) ஸ்விசர்லாந்தில் உள்ள ஒரு நிறுவனத்தின் கூட்டு முயற்சியில் Geben Trading Ltd என்னும் ஒரு பிரிட்டிஷ் வெர்ஜின் தீவில் உள்ள கம்பெனியுடன் பணப் பரிவர்தனை நடத்தியுள்ளார்.
13) இதில் மிகவும் கவனிக்க வேண்டியது இந்தப் பரிவர்த்தனைகள் எல்லாமே UBS என்கிற ஒரு "ஸ்விஸ் வங்கி" மூலமே நிகழ்ந்துள்ளது.
14) இவர் மலேசியாவில் 1.9 மில்லியன் மலேசியப் பணத்தின் மூலம் வீடு (பிளாட்) ஒன்றையும் வாங்கியுள்ளார்.
15) மலேசியாவில் பணக்காரர்கள் மட்டுமே புழங்கும் பல Cafe Coffee Day கடைகள் இவரால் நடத்தப்படுகின்றன.
16) இது தவிர இந்த ரெயிடில் 30 கோடி வெளிநாட்டுப் பணப்பரிவர்த்தனை பேப்பர்கள் சிக்கியுள்ளன.

இதில் நாம் பெரிதாகத் தெரிந்து கொள்ளவேண்டியது Aircel – Maxis டெலிகாம் கம்பெனியின் தலைமை அலுவலகம் மலேசியாவிலேயே உள்ளது.

கார்த்திக் சிதம்பரத்தின் பல பல பணப் பரிவர்த்தனைகள் அமெரிக்கன் டாலர்களிலும் ஐரோப்பிய யூரோக்களிலுமே நடந்துள்ளது.

இவரின் சிங்கப்பூர் நிறுவனத்தின் துணை நிறுவனம் ஒன்று ஸ்பெயின் நாட்டில் ஆகஸ்ட் 2012 இல் Advantage Estrategia Esportiva SLU என்ற பெயரில் நிறுவப்பட்டது.

இது ஒரு ஸ்போர்ட்ஸ் அகெதமி. இதற்கு 4 ஏக்கரில், 7 டென்னிஸ் கோர்ட்கள் உள்ளது. இவர் ஒரு மில்லியன் அமெரிக்க டாலரில் பிரான்ஸில் ஒரு நிறுவனம் அமைத்துள்ளார். பெயர் Pampelonn Organisation.

இவரின் சிங்கப்பூர் நிறுவனம் மேலும் கிரீஸில் உள்ள வேறொரு நிறுவனத்துடன் பணப் பரிவர்த்தனை செய்துள்ளது. 50,000 அமெரிக்க டாலர்கள் பாங்க் ஆப் அமெரிக்கா அக்கவுன்ட்டுக்கு கார்த்திக் சிதம்பரம் கம்பெனி மாற்றியுள்ளது. இந்தப் பணம் அனுப்பப்பட்ட கம்பெனி நியூயார்க்கில் பிராமிஸரி நோட்டுகளை மாற்றம் செய்யும் நிறுவனம்.

இவரின் சென்னை நிறுவனம் கீழ்க்கண்ட நிறுவனங்களுடன் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளது. "Aircel Televenutres, DCB Client, Diageo Scotland Limited, Katra Group, Sri Lanka Export Development Board, Unifi Wealth Management Ltd, VST Tillers Tractors, Carlton Trading Company, Claris Life Sciences’, ITC Centre, Best Land Realty Limited, Essar Steel Limited, Gokul Builders and Estates, S Kumar, INX Media, Reflections, Thiagarajar Mills Private Limited, Sak Soft, EL ForgeLimited" !

இத்தனை பிரம்மாண்டமான பணப் பரிவர்த்தனைகள், முதலீடுகள், கம்பெனி வாங்கியது, நிறுவனங்களை அமைத்தது அனைத்துமே Aircel – Maxis டீலுக்குப் பிறகுதான். அதாவது 2006 க்குப் பிறகு மட்டுமே !

வருமானவரித் துறையும் அமலாக்கப் பிரிவும் இந்த எல்லா முதலீடுகளையும் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர். இவர்களே Aircel – Maxis ஊழல் வழக்கை கண்காணிப்பவர்கள் மற்றும் CBI இடம் பரிமாறி கொண்டவர்கள் !

சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு தங்களுடைய சார்ஜ் ஷீட்டில் FIPB (Foreign Investment Promotion Board) விலக்கு கொடுத்த அப்போதைய நிதி அமைச்சரின் செயல் முழுமையான சட்டத்துக்குப் புறம்பான நிகழ்வு என்று கூறியுள்ளனர் !

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...