மறுவாழ்வு மையங்களை திறக்கவேண்டும் மதுக்கடைகளை மூட வேண்டும்

மதுக்கடையை மூடவலியுறுத்தி பா.ஜ.க சார்பில் சென்னையில் இன்று கோட்டையைநோக்கி பேரணி நடைபெற்றது.

சேப்பாக்கத்தில் இருந்து பேரணிபுறப்பட்டது. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் தலைமை தாங்கினார். அகில இந்தியசெயலாளர் முரளிதரராவ் சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

பேரணியில் கலந்துகொண்டவர்கள் மதுவால் ஏற்படும் சீரழிவை வலியுறுத்தும் வகையில் பாடைகட்டியும், வெள்ளை சேலை கட்டி பெண்களும் கலந்து கொண்டனர்.

பா.ஜனதா மது இல்லாத ஆரோக்கியமான தமிழகத்தை விரும்புகிறது. ஆனால் அதிமுக.வும், திமுக.வும் மதுவுக்கு துணைபோகிறது. நாங்கள் பசும்பால் வேண்டும் என்கிறோம். அவர்கள் பட்டைச்சாராயம் வேண்டும் என்கிறார்கள், இதுதான் பா.ஜனதாவுக்கும் அவர்களுக்கும் உள்ள வேறுபாடு.

பசுவை பாதுகாக்கவும், பெண்களை பாதுகாக்கவும் பா.ஜ.க என்றும் துணைநிற்கும் என்றார்.

தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில், தமிழகத்தில் கடைசி கடை மூடப்படும் வரை எங்கள் போராட்டம் தொடரும் தமிழக அரசு உடனடியாக கையில் எடுக்கவேண்டிய வி‌ஷயம் ஒன்றை மூடுவது, இன்னொன்றை திறப்பதுதான். அதாவது அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் மறுவாழ்வு மையங்களை திறக்கவேண்டும். அதே நேரத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும், தமிழக மக்களை குடிகாரர்களாக மாற்றியது திமுக. இதற்கு மு.க.ஸ்டாலின் என்ன பிராயச்சித்தம் தேடப்போகிறார். ஒருகாலத்தில் இந்துக்களை திருடர்கள் என்று கூறியவர்கள் இன்று கோவில் குளங்களை தூர்வாரி பாவ விமோசனம் தேடிக்கொள்கிறார்கள்.

படித்து பழகு என்று சொல்ல வேண்டியவர்கள், குடித்துபழகு என்று தமிழகத்தை ஆக்கிவிட்டார்கள். எனவே ஒருகட்சிக்கு மாற்றாக இன்னொரு திராவிட கட்சி இருக்கமுடியாது, இந்த நாட்டை காவிகள் ஆளலாம், பாவிகள் ஆளக்கூடாது என்பதில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

மருத்துவ செய்திகள்

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...