எஸ்எஸ்பி படைக்காக பிரத்யேக உளவுப்பிரிவு

சமூக ஊடகங்களில் தவறானதகவல்களை வெளியிட்டு பதற்றத்தை ஏற்படுத்த தேசவிரோதசக்திகள் முயற்சி மேற்கொண்டுள்ளன. எனவே அவ்வாறு வரும் தகவல்களை ஆராயாமல், வாட்ஸ்-ஆப் போன்ற வலைதளங்களில் பகிர வேண்டாம்' என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.


துணை ராணுவப் படைப் பிரிவுகளில் ஒன்றான சஷஸ்திர சீமா பல் (எஸ்எஸ்பி) படைக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள உளவுப்பிரிவை அவர் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் தொடங்கிவைத்தார். இந்தியா-நேபாளம் இடையிலான 1,751 கி.மீ. எல்லையையும், இந்தியா-பூடான் இடையிலான 699 கி.மீ. நீள எல்லையையும் காக்கும்பணியில் ஈடுபட்டுள்ள இப்படையின் வீரர்களை ராஜ்நாத்சிங் பாராட்டினார். அவர் மேலும் பேசியதாவது:


பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளுடனான நமது எல்லைப்பகுதி முள்வேலியிடப்பட்டுள்ளது. அவ்வாறு இல்லாமல், இந்தியா-நேபாளம், இந்தியா-பூடான் ஆகியவற்றுக்கு இடையிலான எல்லைகள் திறந்தவெளி எல்லைகளாக உள்ளன. விசாஇல்லாமல் இருதரப்புமக்களும் சென்றுவர இந்த எல்லைகள் அனுமதிக்கின்றன. இத்தகைய திறந்தவெளி எல்லைகளைப் பாதுகாப்பது மிகவும் கடினமாகும்.


ஒரு திறந்தவெளி எல்லையில், எந்த வழியாக ஒருகுற்றவாளி வருவார் என்பதையோ, யாரெல்லாம் தேசவிரோதி என்பதையோ, கள்ள நோட்டுகள் அல்லது போலி போதை மருந்துகள் ஆகியவற்றைக் கொண்டு வருவது யார் என்பதையோ பாதுகாப்புப் படையினருக்குத் தெரியாது.


வீரமரணமடையும் துணை ராணுவப் படை வீரர் ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் ரூ.1 கோடி இழப்பீடு அளிக்கப்படும் என்று நான் ஏற்கெனவே அறிவித்துள்ளேன். அதேவேளையில் தற்போது பணியில்இருக்கும், நெருக்கடியான சூழலைச் சந்திக்கும் படைவீரர்களுக்கும் ஏதாவது செய்வது குறித்து பரிசீலித்து வருகிறேன். அவர்களுக்கு நிச்சயம் நல்லதுசெய்வேன்.


அடிப்படை இல்லாத, தவறான செய்திகளும், தகவல்களும் வாட்ஸ்-ஆப் போன்ற சமூகவலைதளங்களில் தொடர்ந்து பரப்பப்படுகின்றன. அவற்றைப் பார்க்கும்பலரும் அவை உண்மை என்று நம்பி விடுகின்றனர்.
இவ்வாறு சமூகத்தில் பதற்றைத் ஏற்படுத்த தேசவிரோத சக்திகள் முயற்சிக்கின. எனவே, அதுபோன்ற தகவல்களை ஆராய்ந்து பார்க்காமல் சமூக வலை தளங்களில் பகிர வேண்டாம் என்று எஸ்எஸ்பி படை வீரர்களைக் கேட்டுக் கொள்கிறேன். அது போன்ற தகவல்களை நம்பாமலும், பகிராமலும் நாம் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்றார் ராஜ்நாத் சிங்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...

உடற்பயிற்சியின் அவசியம்

கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ...

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...