கர்நாடக முதல்வர் சித்தராமையா நிலக்கரி ஒப்பந்தம் தொடர்பாக ரூ.450 கோடி வரை ஊழல் செய்திருப்பதாக கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான எடியூரப்பா குற்றஞ் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் எடியூரப்பா பேசியதாவது:
கர்நாடக மின் உற்பத்தி நிறுவனத்தின் தலைவராக முதல்வர் சித்தராமையா உள்ளார். அதில், தனியார் நிறுவனத் துடனான மின் உற்பத்தி ஒப்பந்தம் தொடர்பாக அவர் ஊழலில் ஈடு பட்டுள்ளார். இதற்கு மின்துறை அமைச்சர் டி.கே.ஷிவகுமார் உடந்தை யாக செயல்பட்டுள்ளார்.
தனியார் நிறுவனத் துடனான அந்த ஒப்பந்ததில் அவர் களின் சார்பாக அரசு மின் உற்பத்தி கழகத் துக்கு கர்நாடக அரசு சார்பாக ரூ.457 கோடி அளிக்கப் பட்டுள்ளது. இதனால் மக்களின் வரிப் பணம் வீணடிக்கப் பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு தரப்பில் இருந்து இது வரை எவ்வித விளக்க மும் அளிக்கப் படவில்லை. இந்த விவகாரம் குறித்து முதல்வர் சித்தராமையா நிச்சயம் விளக்கம் அளிக்க வேண்டும். இதற்கு அவர் முழு பொறுப் பேற்க வேண்டும்.
இது தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரிக்க உத்தர விட வேண்டும் என்று நான் கோரிக்கை வைக்கிறேன். ஏனென்றால் இது மிகப்பெரிய ஊழலாகும். எனவே இது நிச்சயம் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றார்.
கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ... |
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது எலும்பு மஜ்ஜை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.