ஒய்’ பிரிவு பாதுகாப்பை நிராகரித்த மத்திய அமைச்சர்

மத்திய சுற்றுலா மற்றும் தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சர் அல்ஃபோன்ஸ் கண்ணந்தானம் தமக்கு அளிக்கப்பட்ட 'ஒய்' பிரிவு பாதுகாப்பை நிராகரித்துவிட்டார்.


இதுகுறித்து மத்திய சுற்றுலா மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: தமக்கு கூடுதல்பாதுகாப்பு தேவையில்லை என்று அமைச்சர் தெரிவித்து விட்டார். அப்படி கூடுதல்பாதுகாப்பு அளிப்பது, அரசுப் பணத்தை வீணடிக்கும்செயல் என்று அவர் கூறிவிட்டார்.


இதுபோன்ற விவகாரங்களில், மத்திய அமைச்சர் அல்ஃபோன்ஸ் தெளிவாக இருக்கிறார். ரயில், விமான பயணங்களில் சாதாரணவகுப்பில் பயணிப்பதையே அவர் விரும்புகிறார். உயர்வகுப்பு பயணத்தை அமைச்சர் விரும்புவCதில்லை. அதேபோல், சுற்றுப்பயணம் செல்கையில், அரசு விடுதிகள்தவிர்த்து, வேறு எங்கும் அமைச்சர் அல்ஃபோன்ஸ் தங்குவதில்லை. தனிப்பட்ட பயணத்துக்கு தனது காரை பயன்படுத்துகிறார்; அரசு வாகனத்தைப் பயன்படுத்துவதில்லை.

அமைச்சர் அல்ஃபோன்ஸுக்கு சொந்தமான பங்களா பழுதடைத்திருந்தது. அப்போது அரசுக்குச் சொந்தமான அசோகாஹோட்டலில் தங்கவில்லை. தில்லியில் உள்ள கேரள இல்லத்திலேயே தங்கினார். தனது அமைச்சக அலுவலக அதிகாரிகளை ஞாயிற்றுக்Cகிழமைகளில் வேலைகளில் ஈடுபடுமாறும் அவர் கோருவதில்லை என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


முன்னதாக, மத்திய சுற்றுலா துறை அமைச்சகத்துக்கு கடந்த 25-ம் தேதியன்று அமைச்சர் அல்ஃபோன்ஸ் தனது சொந்த வாகனத்தை ஓட்டிச்சென்றார். அப்போது அமைச்சகத்தின் நுழைவு வாயிலில் இருந்த தொழிலக பாதுகாப்புப்படை வீரர்கள், அந்த வாகனத்தை உள்ளே அனுமதிக்கவில்லை. அவர் கேரளத்துக்கு அண்மையில் சென்றபோது, ஆட்டோவில் பயணித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...