ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்படும்

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலின் ஆஸ்தான பண்டிதர் ஸ்ரீமுனுகுராம லிங்கசாமி தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகையை யொட்டி ஆந்திர மாநிலத்தில் இந்தாண்டு எப்படிஇருக்கும் என்றும் கோவில் கொடிமரம் அருகே பஞ்சாங்கம் படித்தார்.

ஆந்திரமாநிலத்தில் அடுத்த ஆண்டு (2019ம்) நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சிமாற்றம் ஏற்படும். தெலுங்கானாவில் மீண்டும் அதே அரசு தலைமையிலான ஆட்சிநடக்கும். டிசம்பர் மாதத்தில் தேர்தல் நடந்தால் மத்தியில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்கும்.

ஆனால் 2019-ம் ஆண்டு தேர்தல் நடந்தால் பா.ஜனதாவுக்கு ஆந்திரா, தெலுங்கானாவில் ஒரு எம்பி. சீட்கூட கிடைக்காது.

உத்தரபிரதேசம், பீகார், ஒடிசா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மாநிலங்களிலும் பாஜ.வுக்கு பெயரளவுக்கு மட்டுமே எம்.பி. சீட்  கிடைக்கும்.

நடிகை ஸ்ரீதேவி மரணம் இயற்கையானது இல்லை. தமிழகத்தில் ரஜினி காந்தின் அரசியல்படம் வெற்றியடையும்.

ஆந்திர மாநிலத்தில் விவசாயத்தில் இந்தாண்டு எதிர்பார்த்த அளவு வளர்ச்சிஇருக்காது. இதற்கு காரணம் வானிலை மாற்றங்கள் விவசாயிகளுக்கு சாதகமில்லாத நிலையில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

திருப்பதி விசாகா சாரதா பீடாதிபதி சொரூபா நந்தேந்திரா திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் கோவிலுக்கு வெளியேவந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தெலுங்கு புத்தாண்டான விளம்பி நாமஆண்டால் ஆந்திராவுக்கு நற்பலன்கள் கிடைக்காது.

இதனால் மாநிலத்தில் ஏராளமான அளவில் குழப்பங்கள், பிரச்சனைகள் ஏற்படும். எனவே இதற்குதீர்வாக விசாகா சாரதா பீடத்தில் சாந்தி ஹோமம் நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. சாந்தி ஹோமத்திற்கு ஏழுமலையான் ஆசிவேண்டியே இங்கு வந்தேன் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...