தமிழகத்திற்கு 6 மாதத்திற்குள்ளாக ஒன்றரை லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள்

மாமதுரை மக்கள் இயக்கம் மற்றும் மதுரை எய்ம்ஸ் மக்கள் இயக்கம்சார்பில் மதுரை மாவட்டத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனையை அளித்ததற்காக மத்திய அரசுக்கும் பிரதமர் நரேந்திரமோடிக்கும் நன்றி தெரிவிக்கும் பொதுக் கூட்டம் மதுரையில் நடைபெற்றது.

மதுரை அண்ணா நகரில் நடைபெற்ற எய்ம்ஸ் நன்றி அறிவிப்பு பொதுகூட்டத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றனர்.

பொதுக் கூட்டத்தில் மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் பேசியதாவது:-

மத்தியில் பாஜக.ஆட்சி வருவதற்கு முன் பலகாலம் காங்கிரசும், 10 ஆண்டு காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியும் ஆட்சியில் இருந்தபோது தமிழகத்திற்கு எத்தனை திட்டங்களை கொண்டுவந்தனர்.

10 மத்திய மந்திரிகள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் இருந்தபோதிலும் 10 கோடிக்கான திட்டத்தைக்கூட மதுரைக்கு கொண்டு வராதவர்கள் திமுக.காரர்கள்.

மத்தியில் நிதி அமைச்சராக உள்துறை அமைச்சராக இருந்தவர்கள் தமிழகத்திற்கு துரோகம்தான் செய்தனர்.

மத்தியில் பாஜக.வின் மோடி ஆட்சி முதல் பட்ஜெட்டிலேயே தமிழகத்திற்கு எய்ம்ஸை அறிவித்தது.எய்ம்ஸ் அறிவிக்கப்பட்டவுடனே நான்யோசித்தது தமிழகத்தில் எந்தபகுதியில் எய்ம்ஸை அமைப்பது என்பதுதான்.

மதுரை தோப்பூரை பற்றி எனக்குதெரியாது. தென் பகுதியில் உள்ள 12 மாவட்டங்கள் பயன்பெறும் என்றுதான் மதுரையில் எய்ம்ஸ் வர பாடுபட்டேன். எந்த மாவட்டத்திற்கும் எய்ம்ஸ் வரக் கூடாது என்று நான் சொல்லவில்லை.

மதுரைக்கு வரவேண்டும் என்பதில் நான் குறியாக செயல்பட்டேன். இதனால் என்மீது பல எம்.பி.க்களுக்கும் மத்திய மந்திரிகளுக்கும் கோபம்கூட இருக்கும்.
 

நான் மத்திய சுகாதாரதுறை மந்திரி நட்டாவை சந்திக்கும் போதெல்லாம் எய்ம்ஸை பற்றிதான் பேசுவேன். இதனால் என் பெயரேயே எய்ம்ஸ் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எய்ம்ஸை தமிழகத்திற்கு அளித்த பிரதமர்மோடிக்கு ஏன் தமிழக அரசு நன்றி தெரிவிக்க வில்லை.

தமிழகத்திற்கு 6 மாதத்திற்கு உள்ளாக மட்டும் ரூபாய் ஒன்றரைலட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை கொண்டுவந்து உள்ளது மோடி அரசு இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...