மதுரையில் எய்ம்ஸ் அமைவது உறுதி

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் எந்த சிக்கலும் இல்லை தாமதம்  ஏன்? தமிழக  பாஜக மாநில தலைவர் Dr.தமிழிசை சௌந்தராஜன் விளக்கம்.

           சுதந்திரம் அடைந்த பின்னர் கடந்த ஏழுபது ஆண்டுகள் பெரும்பாலும் காங்கிரஸ்  ஆட்சி செய்த காலங்கள் சேர்த்து இந்தியா  முழுவதும்  9  இடங்களில் மட்டுமே  எய்ம்ஸ் மாதிரி மருத்துவமனைகள் அமைக்கப்பட்டன. கடந்த 4 ஆண்டுகளில்  பிரதமர் மோடி அவர்களின் அரசு புதிதாக பதினான்கு இடங்களில் எய்ம்ஸ்  மாதிரி மருத்துவமனைகள் உயர்சிகிச்சைக்கு நாடு முழுவதும் அமைய கொள்கை முடிவு எடுத்து செயலாற்றி வருவதனால் அதில் ஏற்கனவே புதிதாக பத்து இடங்களில் திட்டம் செயலுக்கு வந்து மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. மீதமுள்ள இடங்களில் புதிதாக அமைக்க பெரும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

       மதுரை  தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மாதிரி மருத்துவமனை அமைய  மத்திய மாநில அரசுகள் முழுவீச்சில் செயலாற்றி வருகின்றன. மாநில அரசின் சுகாதாரத்துறை பிற துறைகளுடன்  இணைந்து சுற்றுச்சுழல் வருவாய்த்துறை ,நெடுஞசாலைத்துறை, போக்குவரத்துத்துறை இவற்றுடன் விரிவான திட்ட அறிக்கைகள் அரசு நிர்வாக நடைமுறைப்படி படிப்படியாக பெற்று கோப்புகள் தயாரிக்கப்பட்டு விரைவுப்பணிகள் நடைபெற்று  வருகின்றது. மதுரை  தோப்பூரில் அடையாளங்காணப்பட்ட இடத்தின் நடுவே பெட்ரோலிய துறையின் பெட்ரோல் குழாய்கள்  மாற்றியமைக்க ஏற்பாட்டுக்கும் வேலைகள் நடைபெற்று வருகின்றது.

      சுமார் 1500 கோடிக்கான மிகப்பெரிய திட்டம் என்பதால் இவை அனைத்தும் அரசு முறைப்படியும் வடிவைமைக்கப்படும் முறையாக தயார் செய்யது மத்திய, மாநில  அரசுகள் இணைந்து சுமூகமாக செயலாற்றி வருகிறார்கள். இதன் நிறைவு வடிவமே மத்திய அமைச்சரவை கூடி நிதி ஒதுக்கி இறுதியில் அதற்கான ஆணைகள் வரும் என்பது உறுதி. அதுவரை ஆகும் கால அவகாசம் இயற்கையானதுதான். தாமதம் என்பது  கருவுற்ற தாய் குழந்தை பிறக்க 10 மாதம் காத்திருக்க வேண்டுமல்லவா அதுபோலத்தான் இந்த கால அவகாசம்.

     சமீபத்தில் நடந்த பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் கூட நம் பாரத பிரதமர்   முன்னிலையில் மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மாதிரி மருத்துவமனை அமைய உள்ளதற்கு நான் நன்றி தெரிவித்து உரையாற்றினேன்.

       தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்ட சகோதரர் கூட இந்த அறிவுப்பு அரசிதழில் வெளியிடப்பட்டிருக்கிறது  என்றுதான் சொல்லியிருக்கிறார். ஆனால் அதன்பிறகு ஏன்  ஓப்புதல் ஆணை  இல்லை என்று கேட்டிருக்கிறார். கட்டிட ஒப்பந்தம்  யாருக்கு வழங்க பட்டிருக்கிறது?  கருவுற்ற பின்புதான் குழந்தை  பிறக்க 10 மாதம் இயல்பான கால அவகாசம்  தேவை அதுபோலத்தான் இதுவும்.ஆனால் கருவுற்றபின் 3 மாதத்திலேயே குழந்தை ஏன் பிறக்கவில்லை   என்று கேள்வி எழுப்புவது எப்படி சாத்யமில்லையோ அதுபோலத்தான் நிதி ஒதுக்கவில்லை என்பதும் என்னை பொறுத்தவரை தமிழக பாஜக சார்பில் எங்களது முயற்சிக்கு தொடர்ந்து முயற்சி செய்வது மட்டுமல்லாமல் தொடர்ந்து அதற்கான வழிமுறைகளையும் பல்வேறு நிலைகளில் தொடர்ந்து கண்காணித்தும்,பின்பற்றியும் வருகிறது என்பதை தெரிவித்துகொள்கிறேன்.

மதுரையில் எய்ம்ஸ் அமைவது  உறுதி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...