பிரதமர் மோடியை சந்தித்து 15 ஆயிரம்கோடி நிவாரணம் கோரினார்

டில்லி சென்ற முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடியை சந்தித்து, புயல்சீரமைப்பு பணிகளுக்காக ரூ.15 ஆயிரம்கோடி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்ததாக கூறினார்.
 

 

கடந்த 16-ம் தேதி கஜா புயல் தாக்கியதை அடுத்து டெல்டா மாவட்டங்கள் கடும்சேதத்தை சந்தித்துள்ளன.ஏராளமான பொருட் சேதத்துடன் உயிர்தேசமும் ஏற்பட்டுள்ளது. அமைச்சர்கள், அதிகாரிகள் உடனான ஆலோசனை கூட்டத்துக்குப்பின் நேற்று முன்தினம் (நவ.,20) முதல்வர் நேரில்சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் சேதமதிப்பீட்டு அறிக்கையுடன், நேற்று மாலை டில்லி சென்றார். அங்கு அதிமுக. எம்.பி.க்களுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார். 

 

பிரதமர் மோடியை இன்று(நவ.,22) காலை தமிழகமுதல்வர் பழனிசாமி சந்தித்து புயல்பாதிப்பு குறித்து விளக்கி கூறினார்.பின்னர் முதல்வர் பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது: கஜாபுயல் பாதிப்பு குறித்தும், சேதவிவரங்கள் குறித்தும் பிரதமரிடம் விளக்கி கூறி, கோரிக்கைமனு அளித்து உள்ளேன். சேதமடைந்த பகுதிகளை பார்வையிட உடனடியாக மத்தியகுழுவை அனுப்பி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன். விரைவில் மத்திய குழுவை அனுப்பி வைப்பதாக பிரதமர் கூறினார். நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கவேண்டும் எனவும், இடைக்கால நிவாரணமாக ரூ.1,500 கோடி கோரிக்கை வைத்துள்ளேன். இதனை வழங்குவதாக பிரதமர் கூறியுள்ளார்.
 

புயலால் 12 மாவட்டங்கள் பாதிக்கபட்டுள்ளன. 63 பேர் உயிரிழந்துள்ளனர். 12,298 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 3, 41, 870 லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளன. 30 ஆயிரம் ஹெக்டேர் தென்னை மரங்கள்சேதமடைந்துள்ளன.நிஷா புயலின் போது திமுக ஆட்சியில் அளித்த நிதியைவிட தற்போது நிதி வழங்கப்பட்டுள்ளது.

 

சாலை மார்க்கமாக ஸ்டாலின் எத்தனை இடங்களில் சென்று புயல்சேதத்தை ஆய்வு செய்தார். நான் ஹெலிகாப்டரில் சென்றதால்தான் சேத விவரம் முழுமையாக தெரிந்தது. பாதிப்புகுறித்த புகைப்படங்களை எடுத்துவைத்துள்ளேன். 3 இடங்களுக்கு சென்ற ஸ்டாலின், புயல்பாதிப்பை பார்வையிட்டு, பாதியிலேயே திரும்பிவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...