ஆட்சியின் பெயரால் மக்களை படுகொலை செய்யும் திரிணாமுல்

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் அரசியலின்பெயரால் மக்கள் படுகொலை செய்யப் படுகின்றனர் .வரும் மக்களவைத் தேர்தல் இந்தியாவின் எதிர் காலத்தை நிர்ணயிக்கும் தேர்தல் மட்டுமின்றி மேற்குவ ங்கத்துக்கும் மிக முக்கியமான தேர்தல். ஜனநாயகத்தை படுகொலை செய்யும் திரிணமூல் காங்கிரஸ் அரசு தொடரவேண்டுமா, அல்லது தூக்கியெறியப்பட வேண்டுமா என்பதை முடிவு செய்யும் தேர்தலாக இருக்கும். முதல்வர் மம்தா தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் அரசியலின் பெயரால் மக்கள் படுகொலை செய்ய படுகின்றனர். பாஜக மற்றும் பிற கட்சிகளைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் பாஜக நடத்த திட்டமிட்டிருந்த ரத யாத்திரைக்கு முதல்வர் மம்தா பானர்ஜி தடைவிதித்துள்ளார். தோல்வி பயம் காரணமாகத்தான் பாஜக ரதயாத்திரைக்கு அவர் அனுமதி மறுத்துள்ளார். பாஜகவின் ரத யாத்திரையை வேண்டுமானால் மம்தா பானர்ஜி தடைசெய்யலாம். ஆனால், மக்களின் மனங்களில் தாமரை மலர்வதை அவரால் தடுக்க முடியாது. மேற்கு வங்கத்தில் ஜனநாயகத்தை நிலை நாட்டும் வகையில் மக்களவைத் தேர்தல் முடிவுகள் அமையும். திரிணமூல் காங்கிரஸ் படுதோல்வியடையும்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொடுத்ததை விட மேற்கு வங்கத்துக்கான வளர்ச்சித் திட்டங்களுக்காக 2.5 மடங்கு அதிக நிதியை பாஜக தலைமையிலான மத்திய அரசு கொடுத்தது. அந்தப்பணத்தில் பாதியை ஊடுருவல் காரர்களும் மீதியை திரிணமூல் காங்கிரஸ் தலைவர்களும் எடுத்துக் கொண்டு விட்டனர். ஊடுருவல் காரர்களை திரிணமூல் காங்கிரஸ் அரசு ஆதரிக்கிறது. பாஜக ஆட்சிக்குவந்தால் ஊடுருவல் காரர்கள் இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம்.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ளது. கொல்கத்தாவில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் தங்கள் வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ளனர். கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு மேற்கு வங்க மக்கள் முடிவுகட்டினர். அதேபோல, மம்தா பானர்ஜி ஆட்சிக்கும் மக்கள் முடிவுகட்ட வேண்டும்.

மேற்குவங்க மாநிலம் மால்டாவில் நடந்த கூட்டத்தில் பாஜகவின் தேர்தல் பிரசாரத்தை கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா நேற்று தொடங்கி வைத்து பேசியது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

மருத்துவ செய்திகள்

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...