மதுரைவந்த பிரதமர் மோடி, எய்ம்ஸ் மருத்துவ மனைக்கான அடிக்கல் நாட்டினார். நெல்லை, மதுரை, தஞ்சாவூரில் மத்திய அரசு உதவியுடன் கட்டப்பட்ட பல் நோக்கு மருத்துவ மனைகளை திறந்து வைத்தார். தபால் துறை மூலம் 12 பாஸ்போர்ட் சேவை மையங்களையும் துவக்கி வைத்தார்.
மதுரை வந்துள்ள அனை வருக்கும் வணக்கம் என தமிழில் உரையை துவக்கிய பிரதமர் மோடி தொடர்ந்து பேசிய தாவது:மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள மதுரைக்குவந்தது மகிழ்ச்சி. நாட்டின் நான்கு திசைகளிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. சுகாதாரதுறையில் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை சிறந்து விளங்குகிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைமூலம் காஷ்மீர் முதல் குமரிமுதல் சேர்ந்தவர்களும் பயன் பெறுவார்கள். 1,200 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட செலவில் கட்டப்படும் எய்ம்ஸ் மருத்துவமனை மக்களுக்கு பெரிதும் பலன் தரும். எய்ம்ஸ் அடிக்கல் மற்றும் பல்நோக்கு மருத்துவ மனை திறந்து வைக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
கடந்த 4.5 ஆண்டுகளில் மருத்துவபடிப்புகளில் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. அனைவருக்கும் குறைந்தவிலையில் சிகிச்சை கிடைக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. ஆயுஷ்மான் பாரத் திட்டம் துவக்கி வைத்தது வரலாற்று சாதனை. இந்ததிட்டம் மூலம் 10 கோடி குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்குகிறது.
இந்திய மக்களுக்கு, உலகதரத்தில் குறைந்தசெலவில் சிகிச்சை கிடைக்க செய்வதே எங்களின் நோக்கம். தமிழகத்தில், 1,320 சுகாதார நிலையங்களை தமிழகம் செயல் பாட்டிற்கு கொண்டுவந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. 2023க்குள் காசநோயை ஒழிக்க தமிழகஅரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ... |
முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.