வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் பி.எஸ்.எல்.வி. சி. 45 ரக ராக்கெட் …

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் பி.எஸ்.எல்.வி. சி. 45 ரக ராக்கெட் …28 செயற்கைகோளுடன் அது பறந்திருக்கின்றது …

இதில்தான் இந்தியாவின் மாயக்கண்ணான அந்த எமிசாட்டும் இருக்கின்றது …

இந்த எமிசாட்டுக்காகத்தான் அந்த A-SAT செயற்கைகோள் ஏவுகணையினை இந்தியா சோதித்தது …

மிக உயரத்தில் அதை நிலைநிறுத்தும்பொருட்டு இந்திய ராக்கெட் சென்று கொண்டிருக்கின்றது …

விரைவில் நிலை நிறுத்தும் …

28 செயற்கை கோளை சுமந்து செல்வது சாதாரண விஷயமல்ல …

ஒரு காலத்தில் இந்தியாவிற்கு கிரையோஜனிக் நுட்பத்தை தரக்கூடாது என தடுத்த அமெரிக்காவின் செயற்கை கோளையும் இந்திய ராக்கெட் சுமந்து செல்கின்றது …

அவ்வகையில் மாபெரும் வெற்றி இது

மாபெரும் சாதனையினை தேசம் செய்திருக்கின்றது அதற்கு பாடுபட்ட விஞ்ஞானிகளை தேசம் வாழ்த்தி வணங்குகின்றது

இந்த செய்தியில் தலைமை விஞ்ஞானி சொல்லியிருக்கும் விஷயங்களை கவனியுங்கள் …

இந்திய ராணுவத்திற்காக‌
436 கிலோ எடை கொண்ட ‘எமிசாட்’ செயற்கைகோள் உருவாக்கப்பட்டுள்ளது …

இது 753 கி.மீ உயரத்தில் புவிவட்ட பாதையில் நிலை நிறுத்தப்படுகிறது …

இது தவிர லித்துவேனியா நாட்டுக்கு சொந்தமான 2 செயற்கைக்கோள்கள், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து நாடுகளுக்கு சொந்தமான 24 செயற்கைக்கோள்கள் உட்பட 28 செயற்கைக்கோள்களும் சுமார் 505 கி.மீ உயரத்தில் விண்வெளியில் நிலை நிறுத்தப்படுகிறது.

28 செயற்கைக்கோள்களும் சுற்றுப் பாதைக்குள் நுழைந்த உடன், ராக்கெட்டின் 4-வது நிலை எமிசாட்டுக்காக வேறுபட்ட உயரத்திற்கு இயக்கப்படுகிறது …

கவனித்தீர்களா … ?

இந்த எமிசாட்தான் இப்பொழுது துருப்பு சீட்டு 753 கிமீ உயரத்தில் அதை நிறுத்த போகின்றார்கள் …
பல்வேறு வகையான உளவு தகவல்களை அது அனுப்பும் …

இதனை நிச்சயம் உடைக்க எதிரி நாடுகள் விரும்பும் …
அப்படி ஒரு கோள் இயங்க அவை விடாது …

இதனால்தான் எங்களிடமும் சாட்டிலைட்டை நொறுக்கும் ஏவுகணை உண்டு என நிரூபித்து காட்டிவிட்டு எமிசாட்டினை இன்று 1-ஆம் தேதி அனுப்பியது இந்தியா …

எமிசாட் உள்நாட்டு தயாரிப்பு என்றாலும் அதன் நவீன பாகங்கள் நம் தயாரிப்பு அல்ல‌ …

பல வெளிநாடுகளிலிருந்து பெற்ற நுட்பம் மூலம் அட்டகாசமான நவீன கோளை செய்துவிட்டோம் …

இவை எப்படி கிடைத்தன?

சொன்னால் திட்டுவீர்கள் …
ஆனால் அதுதான் உண்மை … #மோடியின் திருத்தபட்ட வெளியுறவு கொள்கையால் சில சக்திகளிடமிருந்து பெறப்பட்ட விஷயம் இது …

சுதந்திர காலத்திற்கு பிறகு இப்போது நாட்டுக்கு எது தேவையோ அதை பெற்றுவிட்டோம் …

ஏப்ரல் 1-ல் எமிசாட் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டபின் அதற்கான பாதுகாப்பினை தற்போது சோதிக்கபட்ட ஏவுகணை A-SAT வழங்கும்

தேசம் பெரும் மைல் கல்லினை எட்டியிருக்கின்றது …

ஜெய்ஹிந்த் !

~ஸ்டான்லி ராஜன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.