யோகாசனத்துக்கு சர்வதேச புகழைப் பெற்றுத் தந்தவர் பிரதமர் மோடி

யோகாசனத்துக்கு சர்வதேசளவில் புகழைப்பெற்றுத் தந்தவர் பிரதமர் நரேந்திர மோடி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சர்வதேச யோகா தினத்தையொட்டி, ஹரியாணா மாநிலம் ரோத்தக்கில் வெள்ளிக்கிழமை அந்த மாநில அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரமாண்ட யோகாசன நிகழ்ச்சியில் அமித் ஷா பங்கேற்று யோகாசனப் பயிற்சியில் ஈடுபட்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் என்ற அறிவிப்பை கடந்த 2014 டிசம்பர் 11-ஆம் தேதியன்று ஐ.நா. அறிவித்தது. இதற்கானயோசனை அளித்தவர் பிரதமர் நரேந்திர மோடி. இந்தியாவின் பாரம்பரியமான யோகாவின் மூலம் சர்வதேச சமுதாயம் பயனடையவேண்டும் என்ற நோக்கில் மோடி மேற்கொண்ட முயற்சிக்கு வெற்றிகிடைத்துள்ளது. இதன் மூலம் சர்வதேச அரங்கில் யோகாவுக்கு பெரும் புகழை மோடி பெற்றுத்தந்துள்ளார். இதன்மூலம் நமது கலாசாரத்தின் பெருமையை உலகம் உணர்ந்துள்ளது. யோகா மூலம் ஒட்டுமொத்த உலகமே இந்தியாவின் பக்கம் ஈர்க்கப் பட்டுள்ளது.

யோகா செய்வதால் என்ன கிடைத்துவிட போகிறது என்று இப்போது சிலர் கேள்வி எழுப்பு கின்றனர். இந்த நாளில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் கோடிக் கணக்கான மக்கள் இணைந்து யோகாசன பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். உலகமக்களை ஒன்றிணைக்கும் கருவியாக நமது யோகா உயர்த்தப் பட்டுள்ளது. கோடிக் கணக்கான மக்கள் யோகாசனத்தை தங்கள் வாழ்வின் ஒருபகுதியாக மாற்றி கொண்டுள்ளனர். யோகாவின் நன்மையை அவர்கள் முழுமையாக உணர்ந்துள்ளதே இதற்குக்காரணம்.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சாதுக்களும், முனிவர்களும் மட்டுமே யோகாசன பயிற்சி செய்யமுடியும் என்ற நிலை இருந்தது. பிற்காலத்தில் அதன் நன்மையை உணர்ந்து அனைத்துத் தரப்பினரும் யோகாவில் ஈடுபட்டனர். கடந்த 2014-ஆம் ஆண்டில்தான் யோகாவுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்தது.

சர்வதேச யோகாதினத்தை ஐ.நா. மூலம் அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் மோடி முன்வைத்த 70 நாள்களில் 177 நாடுகள் அதனை ஏற்றுக்கொண்டன. அதன் விளைவாக இப்போது உலகம் முழுவதும் யோகா தினம் அனுசரிக்கப்படுகிறது. உலகுக்கு இந்தியா அளித்த மிகப்பெரிய கொடை யோகா. இதனை சாமானிய மக்களுக்கும் கொண்டுசெல்லும் பணியில் உள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். மனம், உடல் நலனைக் காக்க யோகாவைப் போன்ற சிறந்தகருவி வேறு எதுவும் இல்லை என்றார் அமித் ஷா.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...