தொகுதி வளர்ச்சியில் பாஜக எம்.பி.க்கள் முக்கிய பங்காற்ற வேண்டும்

தொகுதிவளர்ச்சியில் பாஜக எம்.பி.க்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் , தொழுநோய் ஒழிப்பு, காசநோய் ஒழிப்பு உள்ளிட்ட விவகாரங்களிலும் பாஜக எம்.பி.க்கள் பங்கேற்கவேண்டும் என்று மோடி அறிவுறுத்தியுள்ளார்.

தில்லியில் பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் அதிகளவிலான முதல்முறை எம்.பி.க்கள் பங்கேற்றனர். அவர்களிடம் மோடி கேட்டுக்கொண்டதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத்ஜோஷி கூறியதாவது:

நாடாளுமன்றத்துக்கு எம்.பி.க்கள் வருகை தராமல் இருப்பதற்கு கண்டனம்தெரிவித்த மோடி, நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறும் போது அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் பங்கேற்கவேண்டும்; மக்களின் பிரதிநிதியாக நமது கடமையை நாம் சரியாக செய்யவேண்டும்’ என்று வலியுறுத்தினார்.

அவர் மேலும் பேசுகையில், நாடாளுமன்ற கூட்டத் தொடர்களில் கலந்துகொள்வது மட்டும் எம்.பி.க்களின் பணி அல்ல. தொகுதிவளர்ச்சியில் அவர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும். குறிப்பாக, முதல்முறை எம்.பி. க்கள் தொகுதியின் வளர்ச்சிக்காக கடினமாக உழைக்கவேண்டும். ஒருவர் மீது முதல்முறை ஏற்படும் அபிப்ராயம் நல்லதாக இருக்க வேண்டும். ஏனெனில், அந்த அபிப்ராயம் கடைசியாகவும் இருக்கலாம். அதனால் அனைத்து எம்பி.க்களும் ஆர்வத்துடன் செயல்படவேண்டும். அதேபோல், யாரேனும் தனது கடமையை செய்யதவறினால் அவர்கள் குறித்து எனக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்’ என்று மோடி அறிவுறுத்தினார்.

தொழு நோய், காச நோய் ஆகியவற்றை முழுமையாக ஒழிப்பதற்கு எம்.பி.க்கள் முயற்சி செய்யவேண்டும். 2025-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் காசநோயை  முழுமையாக ஒழிக்கவேண்டும் என்று அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதற்காக எம்பி.க்கள் பணியாற்ற வேண்டும்.

மனித உணர்வு களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விவகாரங்கள் மற்றும் சமூக  பிரச்னைகளுக்கு தீர்வுகாண எம்.பி.க்கள் முயற்சி செய்ய வேண்டும். உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து, தொகுதிவளர்ச்சிக்கு தேவையானதை நிறைவேற்ற வேண்டும் என்று எம்பி.க்களுக்கு மோடி அறிவுரை வழங்கினார் என அமைச்சர் ஜோஷி தெரிவித்தார்.

நாடாளு மன்றத்தின் இரு அவை நடவடிக்கைகளின் போது மத்திய அமைச்சர்கள் தவறாது பங்கேற்கவேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். அதுமட்டுமன்றி, அவைக்குவராது விடுப்பு எடுக்கும் அமைச்சர்களின் பெயர்பட்டியல் அதேநாளில் தன்னிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.  மத்திய அமைச்சர்கள் அவைக்கு தொடர்ந்து வருவதில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வரும் நிலையில், அமைச்சர்களுக்கு மோடி இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...