அடுத்த மூன்றாண்டுகளில் 12,500 ஆயுஷ் நலவாழ்வு மையங்கள்

நாடுமுழுவதும் அடுத்த மூன்றாண்டுகளில் 12,500 ஆயுஷ் நலவாழ்வு மையங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளதாகப் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா, ஓமியோபதி ஆகிய பாரம்பரிய மருத்துவத்துக்காக ஆயுஷ் அமைச்சகம் செயல்பட்டுவருகிறது. இந்த அமைச்சகத்தின் சார்பில் டெல்லியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட பிரமர் நரேந்திர மோடி, பாரம்பரிய மருத்துவத் துறையின் மேம்பாட்டுக்கு பாடுபட்டவர்களுக்கு விருதுகளை வழங்கினார். ஆயுஷ்துறையில் புகழ்பெற்றவர்களின் சிறப்பு அஞ்சல் தலையையும் வெளியிட்டார். அரியானா மாநிலத்தில் அமைக்கப் பட்டுள்ள 10 ஆயுஷ் நலவாழ்வு மையங்களையும் காணொலிக்காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்து பேசியதாவது:

நாடுமுழுவதும் 12 ஆயிரம் ஆயுஷ் நிலையங்கள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் முதல்கட்டமாக நடப்பாண்டில் 4 ஆயிரம் ஆயுஷ் நிலையங்கள் அமைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டுவருகின்றன.

ஒரே தேசம், ஒரே வரி மற்றும் ஒரேரேஷன் அட்டையின் அடிப்படையில் அனைவருக்கும் ஒரே மருத்துவசேவை எனும் நோக்கத்தில் ஆயுஷ் திட்டத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது. அதுமட்டுமல்லாமல் 1.5 லட்சம் சுகாதார நிலையங்கள் துவங்கப்பட உள்ளன.

ஆயுஷ் திட்டத்தில் பழமையான மருத்துவமுறையில் புதிய தொழில் நுட்பங்களை பின்பற்ற வேண்டியது அவசிமாகிறது. இதற்கு தேவையான நபர்களை இணைத்து செயல்படுத்த போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன என்று தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...