குடியுரிமை திருத்தசட்டம் மூலம் நாட்டில் எழுச்சி ஏற்பட்டுள்ளது

”குடியுரிமை திருத்தசட்டம் மூலம் நாட்டில் எழுச்சி ஏற்பட்டுள்ளது.காங்கிரஸ் ., ஆட்சியில் நடந்த வரலாற்று பிழைகளை பிரதமர் மோடி சரி செய்து வருகிறார்,” என, மத்தியபெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.

குடியுரிமை திருத்தசட்டத்தை ஆதரித்து, மதுரையில், பா.ஜ.க, சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:குடியுரிமை திருத்தசட்டத்தை கொண்டு வந்ததே, மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ்  ஆட்சியில் தான். அதை, பிரதமர் மோடி தலைமையிலான, பா.ஜ., அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது.ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்து பவர்களுக்கு ஆதரவாக பேசி, தேசபாதுகாப்பிற்கு எதிராக கல்லெறிந்த திமுக.,  காங்கிரஸ் கூட்டணியில் இருந்தபோது, இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கக்கூடாது என்ற அரசாணை வெளியானபோது ஏன் எதிர்க்கவில்லை.

நாட்டை கொள்ளையடிக்கும் பணியை, தி.மு.க.,வுக்கு மன்மோகன்சிங் ஆட்சியில் வாய்ப்பு கொடுத்ததால் அக்கட்சி பேசவில்லை. ஆனால் இப்போது, தி.மு.க., கொதிக்கிறது.தி.மு.க.,வுக்கு எப்போதும், ஹிந்துக்கள் மீது நம்பிக்கைஇல்லை. காங்கிரசுக்கு சீக்கியர்கள் மீது நம்பிக்கை இல்லை.

தற்போது, கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவதையும் ஏன் இருகட்சிகளும் எதிர்க்கவேண்டும்.டில்லி பல்கலையில் மாணவர் போராட்டத்தை துாண்டிவிட்டது, காங்கிரஸ்தான்.ஜம்மு – காஷ்மீரில் சிறப்பு சட்டத்தை நீக்கியது உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை மோடி அரசு செய்துள்ளது.அந்தவரிசையில், குடியுரிமை திருத்த சட்டத்தாலும், நாடுமுழுவதும் எழுச்சி ஏற்பட்டுள்ளது. மன்மோகன் சிங் தலைமையில், காங்., ஆட்சியில் நடந்த பல்வேறு வரலாற்று பிழைகளை, தற்போது பிரதமர் மோடி சரிசெய்கிறார்; இது தொடரும். இவ்வாறு, அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...