ராமர் கோவில் கட்ட அறக்கட்டளை தயார்; மோடி அறிவிப்பு

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி தனது உரையில், ‘இன்று காலை நடைபெற்ற அமைச் சரவையில் அயோத்தி அறக்கட்டளை தொடர்பாக எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளை அறிவிப்பதில் மகிழ்சி யடைகிறேன். உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு இணங்க நாம் ஓர் அறக்கட்டளையை உருவாக்கியுள்ளோம். அதன்பெயர் ஸ்ரீ ராமஜென்மபூமி திர்த்த ஷேத்ரா. அந்த அமைப்பு சுதந்திர அமைப்பாக இருக்கும்’ .

, இந்தியாவில் இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்துவர்கள், பார்சிகள், ஜைனர்கள் யாராயினும் சரி, எல்லாரும் ஒரு “பெரும்குடும்பத்தின்” அங்கத்தினர். ‘இன்னொரு பெரியமுன்னெடுப்பை ராமர் கோவில் யாத்திரிகர்களுக்காக நாம் எடுத்துள்ளோம். அறக்கட்டளைக்காக கோவிலுக்கு அருகிலேயே சுமார் 67 ஏக்கர் நிலத்தை ஒதுக்குகிறோம்’ என்று தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ’அந்த அறக்கட்டளை 15 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும். அதில் தலித்பிரதிநிதி ஒருவர் இருப்பார். அவர் 67 ஏக்கருக்கு பொறுப்பாளராக இருப்பார் என்று கூறினார்.

இதனிடையே, உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க அரசு ஐந்து ஏக்கர்நிலத்தை அயோத்தியில் பள்ளிவாசல் கட்டுவதற்காக சன்னி மத்திய வக்ஃப் வாரியத்துக்கு ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த நவம்பர் 9ஆம் தேதி ராமஜென்மபூமி-பாபர் மசூதி வழக்கில் வெளியான வரலாற்று முக்கியத்துவமிக்க தீர்ப்பில் உச்சநிதிமன்றம் மத்திய அரசுக்கு வழிகாட்டுதல் வழங்கியது. அதன்படி, ஓர் அறக்கட்டளையை உரிய விதிமுறைகளுடனும், அறங்காவலர்குழு அல்லது ஒரு பொருத்தமான அமைப்பையும் அமைக்க வேண்டும். மேலும், அறக்கட்டளையின் செயல்பாடுகள், அறங்காவலர்களின் அதிகாரவரம்புகள், நிலத்தை அறக்கட்டளைக்கு மாற்றுவது என அனைத்து தேவையான விஷயங்கள் குறித்தும் மத்திய அரசு திட்டம் வகுக்க வேண்டும்.

மேலும், உச்ச நீதிமன்றத்தீர்ப்பில் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் அறக்கட்டளை மூலம் ராமர் கோவில் கட்டவேண்டும் என்றும், புதிதாக மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் மாற்று நிலம் உத்திரப் பிரதேசத்தின் ஹோலி டவுனில் பிரதான இடத்தை சன்னி வக்ஃப் வாரியத்துக்கு ஒதுக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு வழிகாட்டுதல்வழங்கியது. ராமர் பிறந்ததாக இந்துக்களுள் பலர் நம்பும் பகுதியில் கோவில் கட்டுவதற்கு மூன்று மாதங்களுக்குள் அறக்கட்டளை அமைக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது குறிப்பிடத் தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...