குடியுரிமை திருத்தச்சட்டம் பற்றி திமுக மக்களிடையே அவதூறு பரப்பி, சட்ட-ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிப்பதாக இல.கணேசன் குற்றம்சாட்டினார். முதல்வராக வேண்டுமென்ற ஸ்டாலினின் கனவு நிறைவேறாததால், திமுக.,வினர் இவ்வாறு செய்வதாக சாடினார்.
தொடர்ந்து பேசிய அவர், ”குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மறு பரிசீலனை செய்ய வாய்ப்பே இல்லை என்றும் அவ்வாறு செய்வது தேவையற்றது” எனவும் குறிப்பிட்டார். இஸ்லாம் மதத்தில் உள்ள பெரியவர்கள் இச்சட்டம் தொடர்பாக இளைஞர்களுக்கு எடுத்துரைத்து, அறிவுரைகூற வேண்டும் எனவும் இல.கணேசன் கேட்டுக் கொண்டார்.
பாகிஸ்தானை விட இந்தியாவில் இஸ்லாமியர்கள் சுதந்திரமாக இருப்பதாகவும், இருப்பினும் பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் யாராவது ஒருவர் உயர் பதவிக்குவர முடியுமா எனவும் அவர் கேள்வி எழுப்பினார். ஆனால், இந்தியாவில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அப்துல்கலாமை குடியரசுத் தலைவராக்கினார் என இல.கணேசன் தெரிவித்தார்.
வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ... |
குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ... |
ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ... |