நாடுதழுவிய மொழி சமஸ்கிருதம்

நாடுதழுவிய மொழி சமஸ்கிருதம். ஆனால் தமிழ்மொழியை தமிழர்கள் மட்டுமே பேசுகிறார்கள் என்று இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயரின் 166-வது பிறந்த நாள் விழாவை யொட்டி சென்னை மாநிலகல்லூரி வளாகத்தில் உள்ள அவரதுசிலைக்கு பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் மரியாதை செலுத்தினார்.
பின்னர், தமிழ் வளர்ச்சியை காட்டிலும் சமஸ்கிருதத்திற்கு அதிகநிதி ஒதுக்கப் பட்டிருப்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தவர் சமஸ்கிருதம் நாடுதழுவிய மொழி. தமிழ் தமிழர்களால் மட்டும் பேசப்படும்மொழி எனவே தமிழை காட்டிலும் சமஸ்கிருதத்திற்கு அதிகநிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். மேலும் தமிழ் வளர்ச்சிக்காக மாநில அரசும் நிதி ஒதுக்குகிறது எனவும் அவர் கூறினார்.
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்துவது குறித்த கேள்விக்கு நீதிமன்றத்தின் உத்தரவை மதிப்பதாகவும், போராட்டங்களை எதிர்கொள்ள தமிழகஅரசு குறிப்பாக காவல்துறை சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளது. இதனால் மிக பெரிய அளவிலான கலவரங்கள் தடுக்கப்பட்டுள்ளது பாராட்டிற்குரியது என்று தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்தால் ஒருஇந்தியன்  பாதிக்கப்பட்டால் ஒருகோடி தருவேன் என நாமக்கல் மாவட்ட பாஜக சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு குடியுரிமை திருத்த சட்டத்தின் உண்மைதன்மையை எடுத்துரைப்பதாகவும், தமிழக முதல்வரும் இதை தான் நேற்று சட்டப்பேரவையில் கூறியுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.
திமுக பதவி ஆசைகாரணமாக பொய் குற்றச்சாட்டு கூறுபவர்களை ஆதரித்து வருகின்றனர், குடியுரிமை திருத்தசட்டத்தை கண்டு யாரும் பயப்படவேண்டாம் என்றும் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கேள்வி கேட்டால் கோபம் வருகிறதா? ...

கேள்வி கேட்டால் கோபம் வருகிறதா? திமுக மீது அண்ணாமலை விமர்சனம் 'கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து ...

டில்லியில் அனைத்து துறை வளர்ச் ...

டில்லியில் அனைத்து துறை வளர்ச்சியையும் உறுதிபடுத்துவோம் – பிரதமர் மோடி டில்லியில் பா.ஜ., ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், 'வரலாற்று சிறப்புமிக்க ...

உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக ...

உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக முன்னிலை உத்தர பிரதேசத்தில் மில்கிபூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், 3ம் ...

டில்லியில் ஆட்சியை கைப்பற்றிய ...

டில்லியில் ஆட்சியை கைப்பற்றிய பாஜக டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ., ஆட்சியை ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

மருத்துவ செய்திகள்

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...

கொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்!

ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ...

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...