இம்ரானின் கைப்பாவை ஸ்டாலின்

”பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கைப்பாவையாக, ஸ்டாலின் உள்ளார்,” என, பா.ஜ.க, தேசிய பொதுச்செயலர் முரளிதர ராவ் பேசினார்.

கிருஷ்ணகிரியில், பா.ஜ., சார்பில் நடந்த, மாற்றுகட்சியினர் இணையும் விழாவில், அவர் பேசியதாவது:மத்திய அரசையும், பிரதமர் மோடியையும், ஸ்டாலின் குறை கூறிக் கொண்டே இருக்கிறார். ஸ்டாலின் அதிஷ்டம் இல்லாதவர். 1947ல், பாகிஸ்தானில், 24 சதவீத இருந்த ஹிந்துக்கள், தற்போது, 1 சதவீதமே உள்ளனர்.இந்தியாவில், மசூதிகளின் எண்ணிக்கையை நினைத்துபார்க்க வேண்டும்.

தேசிய குடியுரிமை சட்டதிருத்த மசோதாவால், முஸ்லிம்களுக்கு பாதிப்பு இல்லை. இருப்பதாக, ஸ்டாலின் நிரூபித்தால், அரசியலை விட்டுவிலக தயார். பா.ஜ., இருக்கும் வரை, ஸ்டாலின் முதல்வராக முடியாது.முஸ்லிம்கள் ஆபத்தில் இருப்பதாக, ஸ்டாலின் பொய்கூறுகிறார். பா.ஜ.,வின் கைப்பாவையாக, அ.தி.மு.க., உள்ளதாக, ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், அவர்தான், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு கைப்பாவையாக உள்ளார். இவ்வாறு அவர்பேசினார்.சந்தன வீரப்பன் மகள்பா.ஜ.,வில் ஐக்கியம்கிருஷ்ணகிரியில், மாற்று கட்சியினர், பா.ஜ.,வில் இணையும் விழா, நேற்று நடந்தது.

பா.ஜ., தேசிய பொதுச் செயலர் முரளிதரராவ், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில், சந்தன கடத்தல் வீரப்பனின் மூத்தமகள் வித்யா ராணி, பா.ஜ.,வில் இணைந்தார்.வித்யா ராணி பேசுகையில், ”மக்களுக்கு சேவைசெய்ய வேண்டும் என்பதுதான், என் தந்தையின் எண்ணம். அவர் தவறான வழியை தேர்வுசெய்தாலும், மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்பதே அவரது எண்ணமாக இருந்தது. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கில், பா.ஜ.,வில் இணைந்துள்ளேன்,” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

கருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை

சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ...

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...