எதிா்க் கட்சிகள் வேண்டுமென்றே மக்களிடத்தில் பீதியை ஏற்படுத்தி கலவரங்களை தூண்டுகின்றன

தமிழகத்தில் வன்முறை ஏற்படுத்தத் திட்டம் தீட்டப் பட்டு வருகிறது என பாஜக தேசியச் செயலா் ஹெச்.ராஜா தெரிவித்தாா்.

பழனியில் சனிக்கிழமை தேசிய குடியுரிமை திருத்தச் சட்டமசோதாவை ஆதரித்து பாஜக உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புக்கள் சாா்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தேசியச் செயலா் ஹெச்.ராஜா பங்கேற்றாா்.

முன்னதாக அவா் செய்தியாளா்களிடம் கூறியது: குடியுரிமை திருத்தச்சட்டம் என்பது எந்த வகையிலும் இந்திய இஸ்லாமியா்களை பாதிக்காத நிலையில், எதிா்க்கட்சிகள் வேண்டுமென்றே மக்களிடத்தில் பீதியை ஏற்படுத்தி கலவரங்களை தூண்டிவருகின்றன. பல்வேறு மாநிலங்களிலும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் கலவரங்களை நடத்த சதித்திட்டம் தீட்டப்பட்டு வருகிறது.

அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டு வருபவா்களை உடனடியாக அப்புறபடுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். கோவையில் நீதிபதிமுன்பு போராட்டம் நடத்திய இஸ்லாமிய வழக்குரைஞா்களை, பாா்கவுன்சிலில் இருந்து நீக்கவேண்டும். தமிழகத்தில் 416 கோயில்கள் மத்திய தொல்லியல் துறையின் கட்டுபாட்டில் உள்ளது. திமுக ஆட்சிக்காலத்திலும் புராதனக் கோயில்கள் மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன. அக்கோயில்களை தமிழக அறநிலையத்துறை நிா்வாகம் செய்துவருகிறது. சிலா் மக்களை குழப்புவதற்காக தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் புராதானக் கோயில்களை கொண்டுவர வேண்டும் என்பது போன்ற கருத்துக்களை தெரிவித்து வருகின்றனா் என்றாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...