குடியுரிமை திருத்தசட்டம்(சிஏஏ) யாருடைய குடியுரிமையையும் பறிக்காது

‘குடியுரிமை திருத்தசட்டம்(சிஏஏ) யாருடைய குடியுரிமையையும் பறிக்காது; இல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும்’ என மத்திய உள்த்துறை அமைச்சர் அமித் ஷா ராஜ்ய சபாவில் தெரிவித்தார்

டில்லியில் ஏற்பட்ட கலவரம் குறித்து ராஜ்யசபாவில் நடந்த விவாதத்தின்போது அமித் ஷா பதில் அளித்து பேசினார். அவர் மேலும் பேசியது,’ டில்லி கலவரத்தின் போது பாதிக்கபட்டவர்களுக்கு தனது அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன். கலவரத்திற்கு காரணமானவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்.

கலவரத்தில் ஈடுபட்டவர்கள் தப்பிக்கமுடியாது. மத வித்தியாச மின்றி கலவரம் ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்தின்முன்பு அனைவரும் கொண்டு வரப் படுவார்கள்.

கலவரகாரர்கள் இந்தியன் பினல்கோட் மற்றும் இந்தியன் கிரிமினல் கோடுக்கு கட்டுப்பட்டுதான் ஆகவேண்டும். கலவரக்காரர்களின் அனைத்து விவரங்களையும் நாங்கள் சேகரித்து வைத்துள்ளோம். ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை போன்றவை கலவரக் காரர்களை அடையாள காண பயன்படுத்த படுகிறது.

ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைதுசெய்து வருகிறோம். இதுவரை 700க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கலவரக்காரர்களை அடையாளம் காண்பிப்பதில் மக்கள் எங்களுக்கு உதவுகின்றனர். இவ்விஷயத்தை கையாள்வதில் அரசு முன் மாதிரியாக இருக்கும்.

முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கு மீண்டும் ஒன்றை நான் கூறி கொள்கிறேன். சிஏஏ குறித்து தவறான தகவல்கள் பரப்பபடுகின்றன. இச்சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்கஅல்ல; குடியுரிமை வழங்குவதற்காகத்தான். தேசிய மக்கள்தொகை பதிவேடுக்கு (என்.பி.ஆர்.,) எந்த ஆவணங்களும் தேவையில்லை. விருப்பமிருந்தால் மட்டுமே தகவல்களை அளிக்கலாம். என்பிஆர்., குறித்து யாரும் அச்சம்கொள்ள தேவையில்லை. அதில் சந்தேகத்திற்கிடமாக எதுவும் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...