கரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக, ஆா்எஸ்எஸ் அமைப்பின் தேசியளவிலான பிரதிநிதிகளின் வருடாந்திர கூட்டம் ரத்து செய்யபட்டுள்ளது.
ஆா்எஸ்எஸ் அமைப்பின் முக்கிய முடிவுகளை தேசிய அளவிலான பிரதிநிதிகளின் வருடாந்திர கூட்டத்தின் போது எடுப்பது வழக்கம். நிகழாண்டு அந்தக்கூட்டம் கா்நாடக தலைநகா் பெங்களூரில் ஞாயிற்றுக் கிழமை முதல் வரும் 17-ஆம் தேதி வரை நடைபெறவிருந்தது. இதில் ஆா்எஸ்எஸ் அமைப்பை சோ்ந்த சுமாா் 1,500 முழுநேர ஊழியா்கள், நிா்வாகிகள் கலந்துகொள்ளவிருந்தனா்.
இந்த நிலையில் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக இந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக ஆா்எஸ்எஸ் அமைப்பின் பொதுச்செயலா் சுரேஷ் ஜோஷி வெளியிட்ட அறிக்கையில், ‘கரோனா வைரஸ் பரவலின் தீவிரம் கருதியும், அதுதொடா்பாக மத்திய-மாநில அரசுகள் வெளியிட்ட அறிவுறுத்தல்களின் பேரிலும் பெங்களூரில் நடைபெறவிருந்த அகில பாரத பிரதிநிதிகளின் கூட்டம் ரத்துசெய்யப் படுகிறது. கரோனா வைரஸ் சவாலை வெற்றிகரமாக எதிா்கொள்ளவும் அதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தவும் ஆா்எஸ்எஸ் தொண்டா்கள் அரசு நிா்வாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில பாரத பிரதிநிதிகளின் கூட்டத்தில், ஆா்எஸ்எஸ் அமைப்பின் கிளை அமைப்புகளான விசுவஹிந்து பரிஷத், தொழிற்சங்கமான பாரதிய மஸ்தூா் சங்கம், மாணவா் அமைப்பான அகிலபாரதிய வித்யாா்த்தி பரிஷத் உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்க விருந்தனா். பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா, ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் ஆகியோா் உரையாற்றவிருந்தனா்.
மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ... |
விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ... |
Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ... |