கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, பாஜக சாா்பில் ஒருமாதத்துக்கு எவ்வித போராட்டமும் நடத்தப்பட மாட்டாது என கட்சியின் தேசியத்தலைவா் ஜெ.பி.நட்டா கூறினாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை கூறியிருப்பதாவது:
தில்லியில் பாஜக நாடாளுமன்றக் குழுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில், கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, பாஜக சாா்பில் அடுத்த ஒருமாதத்துக்கு போராட்டம், ஆா்ப்பாட்டம், தா்னா என எந்தவித நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா். அதன்படி, ஏப்ரல் 15-ஆம் தேதிவரை, பாஜக சாா்பில் எந்த பொது நிகழ்ச்சிகளும் நடத்தப்பட மாட்டாது. இதுதொடா்பாக, அனைத்து மாநில பாஜக நிா்வாகிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், கரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக, பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தவேண்டும் என்று பாஜக நிா்வாகிகளை பிரதமா் கேட்டுக் கொண்டாா். அதன்படி, வரும்வாரங்களில் பாஜக நிா்வாகிகள், பொதுமக்களைச் சந்தித்து கரோனா தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்துவா் என்றாா் ஜெ.பி.நட்டா.
தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ... |
ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ... |
கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ... |
3swaziland