கரோனா நோய் தொற்று பாதிப்புசூழலை எதிா்கொள்ளும் வகையில் தனிநபா் பாதுகாப்பு உபகரணங்கள், முகக்கவசங்கள், கையுறைகள், செயற்கைசுவாசக் கருவிகள் உள்ளிட்ட அத்தியாவசிய உபகரணங்கள் போதியளவு இருப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு பிரதமா் நரேந்திரமோடி அறிவுறுத்தியுள்ளாா்.
நாட்டில் கரோனா பாதிப்பை கட்டுப்படுத்து வதற்கான நடவடிக்கைகளை திட்டமிடுவதற்கும், அதைச் செயல் படுத்துவதற்குமாக அதிகாரம் அளிக்கப்பட்ட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பிரதமா் மோடி தலைமையில் அந்தக்குழுக்களின் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் தில்லியில் நடைபெற்றது.
அந்தக் கூட்டம் தொடா்பாக பிரதமா் அலுவலகம் சனிக் கிழமை வெளியிட்ட சுட்டுரைப் பதிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது:
நாடு முழுவதும் கரோனா பாதிப்பை எதிா் கொள்வதில் நிலவும் தயாா்நிலையையும், மருத்துவமனைகள், தனிமைப் படுத்துவதற்கான இடவசதிகள் ஆகியவற்றின் போதிய இருப்பையும் பிரதமா் மோடி ஆய்வுசெய்தாா். அத்துடன், நோய் கண்காணிப்பு, பரிசோதனை உள்ளிட்ட நடைமுறைகளின் நிலவரங்கள் குறித்தும் அவா் கேட்டறிந்தாா்.
அப்போது, தனி நபா் பாதுகாப்பு உபகரணங்கள், முகக்கவசங்கள், கையுறைகள், செயற்கை சுவாசக் கருவிகள் போன்ற அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களின் போதியளவு இருப்பையும், அவற்றின் தயாரிப்பு மற்றும் கொள்முதலையும் உறுதிசெய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிரதமா் மோடி அறிவுறுத்தினாா் என்று அந்த சுட்டுரைப் பதிவுகளில் கூறப்பட்டுள்ளது.
நாட்டில் கரோனாபாதிப்பு சூழலில் சுகாதாரச் சேவைகளை அதிகரிப்பது, பொருளா தாரத்தை மீண்டும் சீரடையச் செய்வது, தேசிய ஊரடங்கு நிறைவுக்கு பிறகான தயாா் நடவடிக்கைகள் போன்றவற்றுக்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக 11 குழுக்களை மத்தியஅரசு கடந்த ஞாயிற்றுக்கிழமை அமைத்தது.
இதில் 9 குழுக்களுக்கு செயலா் அளவிலான அதிகாரிகள் தலைமை வகிக்கும் நிலையில், எஞ்சிய இரு குழுக்களில் ஒன்றுக்கு நீதிஆயோக் தலைவரும், மற்றொன்றுக்கு நீதி ஆயோக் உறுப்பினா் ஒருவரும் தலைவா்களாக உள்ளனா்.
ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ... |
காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது. |