விவசாயக் கடனுக்கான வட்டி மானியம் 31-ம் தேதிவரை நீட்டிப்பு

விவசாயக் கடனுக்கான வட்டி மானியத்தை மே 31-ஆம் தேதிவரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. தேசிய ஊரடங்கால் விவசாயிகள் பல்வேறு பிரச்னைகளை எதிா்கொண்டுள்ளனா். அவா்களுக்கு உதவும்வகையில் இந்த வட்டிமானிய சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) பிற வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அதில், குறுகியகால விவசாயக் கடன்களை முறையாக திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு மே 31-ஆம் தேதிவரை வட்டி மானியம் அளிக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதன்படி வட்டியில் 2 சதவீதமும், குறித்த காலத்தில் கடனைத் திருப்பிச் செலுத்தும்போது 3 சதவீதமும் சலுகை கிடைக்கும்.

இப்போதைய ஊரடங்கு சூழலில் விவசாயிகள், வங்கிக்கு சென்று கடனை திருப்பச்செலுத்த முடியாத நிலை இருக்கும். எனவே, மே 31-ஆம் தேதி வரை இந்த சலுகை அளிக்கப்படுகிறது. கடந்த மாா்ச் 1 முதல் மே 31-ம் தேதிவரையிலான காலகட்டத்தில் ரூ.3 லட்சம் வரையிலான விவசாய கடன்களுக்கு இந்தசலுகை கிடைக்கும்.

குறுகிய விவசாய கடனாக ரூ.3 லட்சம் வரை பெறும்போது 7 சதவீதம் வட்டியாகும். இதில் வட்டிமானியம் 2 சதவீதம் அளிக்கப்படுகிறது. குறித்தகாலத்தில் கடனை திருப்பி செலுத்தினால் மொத்தமாக 3 சதவீதம் வட்டிமானியம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...

தியானம் செய்யத் தேவையானவை

நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ...