ரிசா்வ் வங்கி அறிவிப்பு தொழில் துறையினருக்கும் பொதுமக்களுக்கும் பலனளிக்கும்

நேற்று மும்பையில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நிதிக்கொள்கை குழுவின் அவசர கூட்டம் நடைபெற்றது.அதில் மீண்டும் பல்வேறு சலுகை திட்டங்களுக்கு இயக்குனர்குழு ஒப்புதல் வழங்கியது.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சக்திகாந்த தாஸ் கூறியதாவது:

* ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு வழங்கும் குறுகியகால கடனுக்கான ‘ரெப்போ’ வட்டி 4.40 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

* வங்கிகளிடம் இருந்து ரிசர்வ்வங்கி பெறும் டெபாசிட்டிற்கான வட்டி 3.75 சதவீதத்தில் இருந்து 3.35 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.இதனால் வங்கிகள் குறைந்த வட்டியில் தாராளமாக கடன் வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.

* ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதால் கடன்தவணை செலுத்துவதற்கான சலுகைக் காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.அதாவது ஆக.31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் பின் தவணையை செலுத்தலாம்.
இது கிராம, நகர, கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும்.

அத்துடன் வங்கி சாரா நிதி நிறுவனங்கள், வீட்டு வசதிகடன் நிறுவனங்கள், நுண்கடன் நிறுவனங்கள் ஆகியவற்றில் கடன் வாங்கியோரும் இத்திட்டத்தில் பயனடையலாம்.நிறுவனங்களின் நடைமுறை மூலதனதேவைக்கு வழங்கப்பட்ட தொகையை திரும்ப செலுத்துவதற்கான கால அவகாசமும் ஆக.31 வரை நீட்டிக்கப்படுகிறது.

இந்தச் சலுகை காலத்திற்கான வட்டி தனிக்கணக்கின் கீழ் வைக்கப்பட்டு நடப்பு நிதியாண்டு இறுதிக்குள் வசூலிக்கப்படும்.கொரோனா தாக்கம் காரணமாக பங்கு மற்றும் கடன் பத்திர சந்தைகளில் நிலையற்றசூழல் காணப்படுகிறது. அதனால் பல நிறுவனங்கள் பங்குகள் கடன்பத்திரங்கள் ஆகியவற்றை வெளியிட்டு நிதி திரட்ட முடியாத நிலை உள்ளது.இதையொட்டி தகுதியுள்ள மூலதனத்தை கொண்டுள்ள வங்கிகள் ஒன்றுக்கொன்று தொடர்புடைய வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும்.

நிறுவனங்களின் குழுவுக்கு ஒருமுறை வழங்கப்படும் கடனுக்கான வரம்பு 25 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.ஜூன் 30 வரை இத்திட்டம் அமலில்இருக்கும்.பணவீக்கம் அதிகரித்துள்ளது கவலை அளிக்கிறது. கொரோனாவால் நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப் படுகிறது. என்று கூறி இருந்தார்.

இந்நிலையில் இதை வரவேற்றுள்ள பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகளில் கூறியுள்ளதாவது:

தொழில் துறையினருக்கும் பொதுமக்களுக்கும் பலனளிக்கும் வகையில் ரிசா்வ் வங்கியின் அறிவிப்புகள் உள்ளன. பிரதமா் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பாா்வைக்கு உதவும்வகையில் இந்த அறிவிப்புகள் உள்ளன. பொது முடக்கம் அமலில் உள்ளபோதும், நிறைவடைந்த பிறகும் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு இந்தஅறிவிப்புகள் உதவும்.

கரோனா நோய்த் தொற்று காரணமாக நாடு இக்கட்டான சூழலை எதிா்கொண்டுள்ள நிலையிலும் பொருளாதாரத்தை சரியானபாதைக்கு எடுத்துச்செல்ல ரிசா்வ் வங்கி நடவடிக்கை எடுத்துவருவது பாராட்டத்தக்கது. ரிசா்வ் வங்கியிலிருந்து மற்ற வங்கிகள் பெறும் கடன்களுக்கான வட்டிவிகிதம் 0.4 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

கடன்களுக்கான மாத தவணைகளை ஆகஸ்டு மாதம்வரை நிறுத்தி வைக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை கடன் பெற்றுள்ள வா்களுக்கு பெரும் பலனளிக்கும் என்று தனது பதிவுகளில் ஜெ.பி. நட்டா குறிப்பிட்டுள்ளாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.