டிரம்ப்புடன் ஆக்கப்பூர்வமான அருமையான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டேன்

பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலை பேசியில் தொடர்பு கொண்டு ‘முக்கியமான ஆலோசனைகளை’ நடத்தியுள்ளார்.

இந்திய நேரப்படி நேற்றுஇரவு நரேந்திர மோடியை டிரம்ப் தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளார். அப்போது அடுத்து அமெரிக்காவில் நடைபெற உள்ள ஜி-7 உச்சிமாநாட்டில் பங்கேற்க வருமாறு மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியா உள்ளிட்ட மேலும் சிலமுக்கிய நாடுகளை ஜி7 கூட்டமைப்பில் இணைத்து கொள்வதற்கு தயாராக இருப்பதாக டிரம்ப் சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில் இந்த தொலைபேசி உரையாடல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் பதிவில் கூறியுள்ள தகவல்கள்,

அமெரிக்க அதிபரும் எனது நண்பருமான டிரம்ப்புடன் ஆக்கப்பூர்வமான அருமையான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டேன். ஜி7 உச்சிமாநாடு தொடர்பாகவும் கொரோனா பெருந்தொற்று தொடர்பாகவும் மற்றும் பல்வேறுவிஷயங்கள் பற்றியும் அப்போது நாங்கள் ஆலோசனை நடத்தினோம்.

செழுமை மற்றும் ஆழம்கொண்ட இந்திய அமெரிக்க நட்புறவு என்பது கொரோனா வைரஸ் காலகட்டத்திற்கு பிறகான உலக கட்டமைப்பின் போது முக்கியமானதாக மாறும். இவ்வாறு நரேந்திர மோடி ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

லடாக் எல்லையில் சீனா அதிகப்படியான படைகளை குவித்துவருகிறது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ குற்றம்சாட்டிய நிலையில் டிரம்ப் மோடியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

மோடியும் தனது டுவிட்டர்பதிவில் ஜி7 மாநாடு மட்டுமல்லாது மேலும் பல விஷயங்களை பேசியதாக கூறியுள்ள கருத்து வெளியுறவு நிபுணர்களால் கூர்ந்து நோக்கப்படுகிறது.

இந்த உரையாடலும் மோடியின் டுவிட்டர் பதிவும் சீனாவுக்கான எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...