பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலை பேசியில் தொடர்பு கொண்டு ‘முக்கியமான ஆலோசனைகளை’ நடத்தியுள்ளார்.
இந்திய நேரப்படி நேற்றுஇரவு நரேந்திர மோடியை டிரம்ப் தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளார். அப்போது அடுத்து அமெரிக்காவில் நடைபெற உள்ள ஜி-7 உச்சிமாநாட்டில் பங்கேற்க வருமாறு மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியா உள்ளிட்ட மேலும் சிலமுக்கிய நாடுகளை ஜி7 கூட்டமைப்பில் இணைத்து கொள்வதற்கு தயாராக இருப்பதாக டிரம்ப் சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில் இந்த தொலைபேசி உரையாடல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் பதிவில் கூறியுள்ள தகவல்கள்,
அமெரிக்க அதிபரும் எனது நண்பருமான டிரம்ப்புடன் ஆக்கப்பூர்வமான அருமையான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டேன். ஜி7 உச்சிமாநாடு தொடர்பாகவும் கொரோனா பெருந்தொற்று தொடர்பாகவும் மற்றும் பல்வேறுவிஷயங்கள் பற்றியும் அப்போது நாங்கள் ஆலோசனை நடத்தினோம்.
செழுமை மற்றும் ஆழம்கொண்ட இந்திய அமெரிக்க நட்புறவு என்பது கொரோனா வைரஸ் காலகட்டத்திற்கு பிறகான உலக கட்டமைப்பின் போது முக்கியமானதாக மாறும். இவ்வாறு நரேந்திர மோடி ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
லடாக் எல்லையில் சீனா அதிகப்படியான படைகளை குவித்துவருகிறது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ குற்றம்சாட்டிய நிலையில் டிரம்ப் மோடியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
மோடியும் தனது டுவிட்டர்பதிவில் ஜி7 மாநாடு மட்டுமல்லாது மேலும் பல விஷயங்களை பேசியதாக கூறியுள்ள கருத்து வெளியுறவு நிபுணர்களால் கூர்ந்து நோக்கப்படுகிறது.
இந்த உரையாடலும் மோடியின் டுவிட்டர் பதிவும் சீனாவுக்கான எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ... |
பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ... |