சீனா, பாகிஸ்தான் நாடுகளிலிருந்து மின்சாதனங்கள் இறக்குமதிக்கு தடை

சீனாவுடன் எல்லைப் பிரச்னை நிலவிவரும் நிலையில், சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து மின் சாதனங்கள் இனி இறக்குமதி செய்யப் படாது என்று மத்திய மின்துறை அமைச்சா் ஆா்கே.சிங் கூறினாா்.

இது தொடா்பாக மாநில மின்துறை அமைச்சா்களுடன் வெள்ளிக் கிழமை காணொலி வழியில் ஆலோசனை மேற்கொண்ட பின்னா், செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

சீனா, பாகிஸ்தான் நாடுகளிலிருந்து மின்சாதன இறக்குமதிக்கு இனி அனுமதிக்கப்படமாட்டாது. எனவே, மாநிலமின் விநியோக நிறுவனங்கள் சீன நிறுவனங்களிடமிருந்து பொருள்களை கொள்முதல் செய்வதற்கான உத்தரவுகளை அளிக்க வேண்டாம்.

சீனாவிலிருந்து மட்டும் ரூ. 21,000 கோடி மதிப்பிலான மின் சாதனங்கள் உள்பட மொத்தம் ரூ. 71,000 கோடி மதிப்பிலான மின்சாதனங்களை இந்தியா இறக்குமதி செய்கிறது. நமது நாட்டின் எல்லையில் அத்துமீறலில் ஈடுபடும் ஒருநாட்டிடமிருந்து இந்த அளவு மின்சாதனங்கள் இறக்குமதி செய்யப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சீனா, பாகிஸ்தான் நாடுகளிடமிருந்து நாம் இனி எதையுமே வாங்கக்கூடாது.

நமக்குத் தேவையான பொருள்களை நாம் உள்நாட்டிலேயே உற்பத்திசெய்யலாம். மின் கோபுரங்கள், மின்தொடா்பு சாதனங்கள், மின் மாற்றிகள், மின்மீட்டா் பாகங்கள் என பல்வேறு மின் சாதனங்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப் படுகின்றன. இந்த உபகரணங்களை இறக்குமதி செய்ய சீன நிறுவனங்களுக்கு மாநில மின்பகிா்மான நிறுவனங்கள் இனி உத்தரவுகளை கொடுக்க வேண்டாம். மத்திய அரசின் சுய சாா்பு இந்தியா திட்டத்தின் கீழ் தேவையான மின் சாதனங்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும். சீனாவிலிருந்து இறக்குமதிசெய்ய அனுமதிக்கப் படமாட்டாது. இது தொடா்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, இறக்குமதிக்கான தடை நடைமுறை படுத்தப்படும்.

மாநில மின்வாரியங்களின கடன்களை சீரமைப்பதற்காகவும், இழப்பை குறைப்பதற்காகவும் உதய், டிடியுஜிஜேஒய், ஐபிடிஎஸ் போன்ற திட்டங்களை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த புதியதிட்டங்களின் கீழ், மத்திய அரசு எந்தவித நிதியையும் கடனாகவோ அல்லது மானியமாகவோ மின்நிறுவனங்களுக்கு வழங்காது. மாறாக, இந்த திட்டங்களின் மூலம் மின் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பைக் குறைப்பதற்கான திட்டத்தை மாநில அரசுகள் வகுக்கவேண்டும். மேலும், சிறப்பு தொகுப்பு திட்டத்தின்கீழ் மாநிலங்கள் ரூ. 93,000 கோடி கடன்களை கேட்டுள்ளன. இதுவரை ரூ. 20,000 கோடி வரை அனுமதிக்கப்பட்டுள்ளது என்று கூறினாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப் பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட ...

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இரு ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யுங்கள் வடமாநில தொழிலாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மா ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு ...

வடமாநிலதவர்கள் மீதான வெறுப்பு ...

வடமாநிலதவர்கள் மீதான  வெறுப்புப் பிரச்சாரத்தை அனுமதிக்கமாட்டோம் தமிழகத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாக, ...

மருத்துவ செய்திகள்

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...

விளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்

விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ...