”இந்தியாவின் வலிமை, வளம், சகோதரத்துவம் மற்றும் யாரையும் தவிர்க் காமல், அனைவருக்கும் நீதி வழங்கும் மகோன்னத அடையாளசின்னமாக, ராமர் கோவில் விளங்கும்,’
ராமர் கோவில் அடிக்கல் நாட்டுவிழா, இந்தியர்கள் அனைவருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க, உணர்வு பூர்வமான தினம்ஆகும். இதற்கான பணி, என் தலைமையில், 1990ல், சோமநாத் முதல், அயோத்திவரை நடைபெற்ற ரத யாத்திரையில் துவங்கியது. ஏராளமானோரின் விருப்பம், சக்தியை ஒருங்கிணைக்க ரதயாத்திரை உதவியது. ராம ராஜ்ஜியம், சிறப்பான அரசாட்சிக்கு அடையாளம்.
இந்திய கலாசாரம், நாகரீகம், பாரம் பரியத்தில், ராமர் மிக உன்னத இடத்தை பிடித்துள்ளார். கருணை, கண்ணியத்தின் அடையாளமாக, சாந்தசொரூபியாக காட்சி தருகிறார். இந்தியர்கள் அனைவரும், ராமரின் நற்பண்புகளை பின்பற்றி, அவர்வழி நடக்க, இந்தகோவில் உத்வேகம் அளிக்கும் என, நம்புகிறேன். ராமஜென்ம பூமியில், பிரமாண்ட ராமர் கோவில் கட்டவேண்டும் என்பது, பா.ஜ.,வின் ஆசை. அது, என் நெஞ்சின் நீண்டகால கனவு. இக்கனவு, தற்போது நிறைவேறியுள்ளதை கண்டு மகிழ்கிறேன்.
ராம ஜென்ம பூமி இயக்கத்திற்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் ஏராளமானோர் விலை மதிப்பற்ற காணிக்கைகளை வழங்கியுள்ளனர். ஏராளமான தியாகங்களை செய்துள்ளனர். அவர்களுக்கும், சன்னியாசிகளுக்கும், தலைவர்களுக்கும், ராமர்கோவிலுக்கு அடிக்கல் நாட்டும் இந்நன்னாளில், என் நன்றியை காணிக்கை ஆக்குகிறேன்.
ராமர்கோவில் கட்ட, உச்ச நீதிமன்றம் வழங்கிய தெளிவான தீர்ப்பு எனக்கு மகிழ்ச்சி அளித்தது. இது, இந்தியர்கள் இடையிலான பிணைப்பை பலகாலத்திற்கு வலுப்படுத்தும். ராமரின் அருள், இந்தியாவிற்கும், இந்தியமக்களுக்கும் பரிபூரணமாக கிடைக்கும்.
பா.ஜ., மூத்த தலைவர் , எல்.கே.அத்வானி
உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ... |
பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ... |
முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ... |