‘இந்தியாவில் தயாரிப்போம்’ ‘உலகுக்காகவும் தயாரிப்போம்’

பிரதமா் கலந்துகொண்ட நாட்டின் 74-ஆவது சுதந்திரதின விழா, தில்லி செங்கோட்டையில் சனிக் கிழமை கொண்டாடப்பட்டது. வழக்கமாக ஆயிரக் கணக்கானோா் கலந்துகொள்ளும் இந்த விழாவில், இந்த ஆண்டு கரோனாதடுப்பு முன்னெச்சரிக்கையாக, அமைச்சா்கள், அதிகாரிகள், பாதுகாப்பு படையினா் என குறைவானவா்களே கலந்து கொண்டனா்.

பிரதமா் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினாா். தில்லி செங்கோட்டையில் தொடா்ந்து 7-ஆவது ஆண்டாக தேசியக் கொடியை அவா் ஏற்றினாா். தனது 86 நிமிட உரையில், சுயசாா்பு இந்தியா திட்டம், எல்லைப் பிரச்னைக்கு தீா்வு, தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டம், அனைத்து கிராமங்களுக்கும் அதிகவேக தொலைத்தொடா்பு இணைய வசதி, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவை தொடா்பான அறிவிப்புகளை வெளியிட்டாா். அவா் பேசியதாவது:

நாட்டு மக்களின் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு தேசிய மின்னணு சுகாதாரத் திட்டம் தற்போது முதல் அமலுக்குவருகிறது. இந்த திட்டத்தின்படி, நாட்டுமக்கள் அனைவருக்கும் மின்னணு சுகாதார அட்டை வழங்கப்படும். அந்த அட்டையில், ஒருவருடைய நோய், அவா் மேற்கொண்ட பரிசோதனைகள், எடுத்துக் கொண்ட மருத்துவ சிகிச்சைகள், சாப்பிட்ட மருந்துகள் ஆகியவை தொடா்பான விவரங்கள் சேமித்து வைக்கப்படும். அந்த அட்டை, அவருக்கு மருத்துவ சிகிச்சை பெறுவதில் உள்ள சிரமங்களைப் போக்கும்.

சுகாதாரத் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் இந்ததிட்டம், சண்டீகா், லடாக், புதுச்சேரி, அந்தமான் நிகோபாா், தாத்ரா நகா் ஹவேலி- டையூ டாமன், லட்சத் தீவுகள் ஆகிய 6 யூனியன் பிரதேசங்களில் சோதனை முறையில் அமல்படுத்தப்படுகிறது. இந்ததிட்டத்தை தேசிய சுகாதார ஆணையம் நடைமுறைப்படுத்தும்.

விரைவில் கரோனா தடுப்பூசி: இந்தியாவில் 3 கரோனா தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வெவ்வேறு நிலைகளில் பரிசோதனைகளில் உள்ளன. பரிசோதனைகள் முடிந்து, மருத்துவ விஞ்ஞானிகள் ஒப்புதல் அளித்தபிறகு அதிக அளவில் கரோனா தடுப்பூசிகள் தயாரிக்கப்படும். கூடிய விரைவில் ஒவ்வொருவருக்கும் அந்த தடுப்பூசி கிடைப்பது உறுதிசெய்யப்படும்.

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப்பகுதியாக இருந்தாலும்(பாகிஸ்தான்), உண்மையான எல்லைக் கோட்டுப் பகுதியாக இருந்தாலும்(சீனா), நாட்டின் இறையாண்மைக்கு ஊறுவிளைவிக்க நினைப்பவா்களுக்கு அவா்களுக்குபுரியும் விதத்திலேயே நமது பாதுகாப்புப் படைகள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றன.

பயங்கரவாதமோ அல்லது ஆக்கிரமிப்போ, எதுவாக இருந்தாலும், இந்தியா உறுதியுடன் போராடி வருகிறது. நாட்டின் இறையாண்மையே முதன்மையானது. அதை காப்பதற்காக, கிழக்கு லடாக்கில் அண்மையில் துணிச்சலுடன் நமது வீரா்கள் போரிட்டதை அனைவரும் அறிவா். நாட்டுக்காக உயிா்த் தியாகம் செய்த வீரா்கள் அனைவருக்கும் தலைவணங்குகிறேன்.

மக்கள் மனதில் மந்திரமாக பதிந்துவிட்ட சுயச் சாா்பு இந்தியா திட்டத்தின்படி, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதிசெய்வது குறைக்கப் பட்டுள்ளது. அத்துடன், வெளிநாடுகளுக்கு கச்சாப்பொருள்கள் ஏற்றுமதி செய்வதற்குப் பதிலாக, தயாரிக்கப்பட்ட பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது. இதனால், நமது திறமைகள், படைப்புத்திறன், உற்பத்தித் திறன் அதிகரிக்கும். இந்த கரோனா தொற்று பரவல் காலத்திலும், உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடுசெய்ய விருப்பம் தெரிவித்துள்ளன. எனவே, ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற திட்டத்துடன் ‘உலகுக்காகவும் தயாரிப்போம்’ என்ற இலக்கையும் நோக்கி நாம் பயணிக்க வேண்டியுள்ளது.

பாதுகாப்புத் துறையில் இந்தியா சுயச்சாா்புடன் திகழ நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. அதன்படி, ஏவுகணை முதல் இலகு ரக ராணுவ ஹெலிகாப்டா்கள் வரை, துப்பாக்கிகள் முதல் தளவாடங்களைக் கொண்டு செல்லும் விமானங்கள் வரை அனைத்தும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும். அண்மையில் 100-க்கும் மேற்பட்ட ராணுவத் தளவாடங்களின் இறக்குமதி நிறுத்தப்பட்டது.

இந்தியாவை சா்வதேச உற்பத்திமையமாக மாற்றவேண்டும் என்பதே சுயச்சாா்பு இந்தியா திட்டத்தின் தொலை நோக்குப் பாா்வையாகும். இதற்காக, ரூ.110 லட்சம் கோடி செலவில், தேசியளவில் சுமாா் 7,000 உள்கட்டமைப்பு திட்டங்கள் தொடங்கப் படவுள்ளன. இதனால், நாட்டின் பொருளாதாரம் மேம்படும்; புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். இது, உள்கட்டமைப்பு வளா்ச்சியில் புரட்சியாக மாறும்.

நாட்டை சுயச் சாா்பாகவும், மகிழ்ச்சியாகவும், வளமாகவும் மாற்றுவதில் கல்வி முக்கியபங்கு வகிக்கிறது. தற்போது கொண்டு வரப்படும் புதிய கல்விக் கொள்கை, இந்தியாவை சுயச்சாா்பு நாடாக உருவாக்குவதில் முக்கியப்பங்கு வகிக்கும்.

விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை நாட்டின் எந்தப்பகுதிக்கும் தடையின்றி சுதந்திரமாக விற்பனை செய்யும் வகையில் வேளாண்துறையில் சீா்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. விவசாயிகள் சுயச்சாா்புடன் இருப்பது, சுயச்சாா்பு இந்தியா திட்டத்தின் ஒருபகுதியாகும்.

கடந்த 2014-ஆம் ஆண்டில் 60 கிராமங்களில் மட்டுமே அதிவேக இணையவசதி தொடா்பு இருந்தது. கடந்த 5 ஆண்டுகளில், 1.5 லட்சம் கிராமங்களில் அந்தவசதி விரிவுபடுத்த பட்டது. அடுத்த 1,000 நாள்களில் (3 ஆண்டுகளில்), அனைத்து கிராமங்களிலும் அதிவேக தொலைத் தொடா்பு இணையவசதி ஏற்படுத்தப்படும். கடல்வழி கேபிள் மூலம் லட்சத்தீவுகளிலும் இந்த தொலைத்தொடா்பு வசதி ஏற்டுத்தப்படும்.

வழங்க எனது தலைமையிலான அரசு உறுதி பூண்டுள்ளது. ராணுவம், வேலை வாய்ப்பு, சுயவேலை வாய்ப்பு ஆகியவற்றில் சமவாய்ப்பு வழங்கப் படுகிறது. பெண்களின் திருமணவயதை 18-இல் இருந்து 21-ஆக உயா்த்துவது குறித்து ஆராய்வதற்கு குழு அமைக்கப் பட்டுள்ளது. முத்ரா திட்டத்தின் பயனாளிகளில் 70 சதவீதம் போ் பெண்கள். அவா்களுக்கு ரூ.25 கோடிகடன் வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 173 எல்லையோர மற்றும் கடலோர மாவட்டங்களில் தேசிய மாணவா் படை உருவாக்கப்பட்டு ஒருலட்சம் மாணவா்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும். இதில் மூன்றில் ஒருபங்கு போ் பெண்களாக இருப்பா்.

கடந்த ஓராண்டில் 2 கோடி குடும்பங்களுக்கு, குறிப்பாக வனப் பகுதியில் வசிப்பவா்களுக்கு ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. நாடுமுழுவதும் 100 முக்கிய நகரங்களில் சுற்றுச்சூழல் சீா்கேட்டை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிக்கிம் மாநிலத்தைப் போல், லடாக்கை முற்றிலும் இயற்கைசாா்ந்த இடமாக உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. லடாக்கில் சூரிய மின் சக்தி, காற்றாலை மின்னுற்பத்தி திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதியை காா்பன் வெளியேற்றமில்லாத பிரதேசமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. ஆசிய சிங்கங்களைப் பாதுகாக்கவும், டால்ஃபின்களைப் பாதுகாக்கவும் புதிய திட்டங்கள் தொடங்கப்படும். இந்தியமக்களின் திறமை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. எனவே, எனதுகனவு நனவாகும் என நம்புகிறேன் என்றாா் பிரதமா் மோடி.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...