பெற்றோர், மாணவர்களின் தொடர் அழுத்தம் காரணமாகவே JEE ,NEET தேர்வு

பெற்றோர் மற்றும் மாணவர்களின் தொடர்ச்சியான அழுத்தம்காரணமாகவே JEE மற்றும் NEET தேர்வுகள் நடத்தப்படுவதாக மத்திய அமைச்சர் ரமேஷ்பொக்ரியால் விளக்கமளித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகாரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டதால் பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் JEE மற்றும் NEET தேர்வுகள் ஜூலைமாதம் நடைபெறவிருந்த நிலையில் செப்டம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது. செப்டம்பர் 1 முதல் 6 வரை JEE தேர்வுகள் நடைபெறும் என்றும், செப்டம்பர் 13ம் தேதி NEET தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா மற்றும் நாட்டின் சிலபகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள சமயத்தில் இந்த தேர்வை நடத்தக் கூடாது என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பெற்றோர் மற்றும் மாணவர்களின் தொடர்ச்சியான அழுத்தங்கள் காரணமாகத் தான் தொற்று நோய்க்கு மத்தியில் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புக்கான தேர்வை நடத்த முடிவெடுத்துள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ்பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில், ‘JEE தேர்வில் கலந்துகொள்ளும் மாணவர்களில் 80% பேர் ஏற்கெனவே அட்மிட் கார்டுகளை பதிவிறக்கம் செய்துவிட்டார்கள். தேர்வை நடத்துமாறு மாணவர்களும், பெற்றோர்களும் அழுத்தம்கொடுத்தனர். இன்னும் எத்தனைகாலம் தொடர்ந்து படிக்கவேண்டும் என்ற அச்சம் மாணவர்கள் மனதில் எழுந்தது. அதனால் அவர்கள் கவலையடைந்தனர். நாங்கள் மாணவர்களுடன் இருக்கிறோம். அவர்களது பாதுகாப்புதான் முக்கியம். அனைத்து சுகாதார நடவடிக்கைகளும் முறையாக பின்பற்றப்படும்’ என்று கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...