பெற்றோர், மாணவர்களின் தொடர் அழுத்தம் காரணமாகவே JEE ,NEET தேர்வு

பெற்றோர் மற்றும் மாணவர்களின் தொடர்ச்சியான அழுத்தம்காரணமாகவே JEE மற்றும் NEET தேர்வுகள் நடத்தப்படுவதாக மத்திய அமைச்சர் ரமேஷ்பொக்ரியால் விளக்கமளித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகாரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டதால் பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் JEE மற்றும் NEET தேர்வுகள் ஜூலைமாதம் நடைபெறவிருந்த நிலையில் செப்டம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது. செப்டம்பர் 1 முதல் 6 வரை JEE தேர்வுகள் நடைபெறும் என்றும், செப்டம்பர் 13ம் தேதி NEET தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா மற்றும் நாட்டின் சிலபகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள சமயத்தில் இந்த தேர்வை நடத்தக் கூடாது என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பெற்றோர் மற்றும் மாணவர்களின் தொடர்ச்சியான அழுத்தங்கள் காரணமாகத் தான் தொற்று நோய்க்கு மத்தியில் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புக்கான தேர்வை நடத்த முடிவெடுத்துள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ்பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில், ‘JEE தேர்வில் கலந்துகொள்ளும் மாணவர்களில் 80% பேர் ஏற்கெனவே அட்மிட் கார்டுகளை பதிவிறக்கம் செய்துவிட்டார்கள். தேர்வை நடத்துமாறு மாணவர்களும், பெற்றோர்களும் அழுத்தம்கொடுத்தனர். இன்னும் எத்தனைகாலம் தொடர்ந்து படிக்கவேண்டும் என்ற அச்சம் மாணவர்கள் மனதில் எழுந்தது. அதனால் அவர்கள் கவலையடைந்தனர். நாங்கள் மாணவர்களுடன் இருக்கிறோம். அவர்களது பாதுகாப்புதான் முக்கியம். அனைத்து சுகாதார நடவடிக்கைகளும் முறையாக பின்பற்றப்படும்’ என்று கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற் ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது எல்விஎம் 3 - எம் 3 ராக்கெட் மூலம் ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 லிருந்து 140 ஆக உயர்வு தில்லி-தரம்சாலா-தில்லி இடையிலான முதலாவது இண்டிகோ விமானத்தை மத்திய தகவல் ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்த ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்திற்கான பிராணவாயு எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலில் உங்களை மீண்டும் ...

கோவிட் விழிப்புடன் இருக்க வேண் ...

கோவிட் விழிப்புடன்  இருக்க வேண்டும் கோவிட்-19, இன்ஃப்ளூயன்சா தடுப்புக்கான பொதுசுகாதார தயார் நிலை ...

பிரதமர் மோடி குறித்து அவதூறு ர ...

பிரதமர் மோடி குறித்து அவதூறு  ராகுல் குற்றவாளி என தீர்ப்பு பிரதமர் மோடி குறித்து அவதூறாகபேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ...

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...