தமிழகத்தில் பாஜக மாற்றத்தை ஏற்படுத்தும் அண்ணாமலை

தமிழகத்தில் பாஜக மாற்றத்தை ஏற்படுத்தும் என சமீபத்தில் பாஜகவில் இணைந்தமுன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை பேசியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தை ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர் அண்ணாமலை. அவர் கடந்த ஆண்டு தன் பணியை ராஜினாமா செய்து விட்டு கோவை மற்றும் ஈரோடு விவ்சாயிகளுக்கு உதவி புரிந்து வருகிறார். பாஜக தேசியதலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் கட்சியில் இணைந்தார் அண்ணாமலை. அந்த நிகழ்வில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் இருந்தார்.

அண்ணாமலைக்கு பாஜக துணைத்தலைவர் பதவி வழங்கி அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “கோவையில் என்ஜினீயரிங் முடித்து விட்டு உத்தரபிரதேசமாநிலம் லக்னோவில் எம்.பி.ஏ. படித்தபோது மக்களை சந்திக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. அப்போது ஏழைமக்களின் வறுமையை பார்க்க முடிந்தது. சமூக மாற்றத்துக்காக எதையாவது செய்யவேண்டும் என்கிற எண்ணமே என்னை அரசியலுக்கு இழுத்து வந்துள்ளது.

பாஜக தமிழர்களுக்கு எதிரான கட்சி என்ற தவறான தகவல் பரப்பப்படுகிறது. தமிழர்களின் நலன் காக்கும் கட்சியாகவே பாஜக உள்ளது. பிரதமர் மோடி தொலைநோக்கு பார்வையோடு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். இளைஞர்கள் மத்தியிலும் பாஜகவுக்கு நல்லவரவேற்பு உள்ளது. இதனால் நிச்சயம் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவேன். தமிழக அரசியலில் திராவிடகட்சிகளுக்கு மாற்றாக பாஜக நிச்சயம்வளரும். அதற்கு தகுந்த பணிகளை நான் மேற்கொள்வேன்” என்றார் .

மேலும் அண்ணாமலை பாஜகவில் சேர்ந்ததுமுதலே சமூக ஊடகங்களில் விமர்சனங்களை சிலர் வைத்து வருகிறார்கள். அவருடைய படிப்பு, அவர்பெற்ற மதிப்பெண்கள் பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில், “தன்னைப் பற்றி புத்தகம் வெளியிடப்போவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோதுதான் ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்று பொறுப்புக்குவந்தேன். கர்நாடகாவில் காங்கிரஸ், மஜத ஆட்சியின் கீழ்தான் ஐ.பி.எஸ். அதிகாரியாகப் பணியற்றினேன். பாஜக ஆட்சியில் 4 நாட்கள்தான் பணிசெய்தேன். என்னுடைய கடந்தகால சாதனைகளை பற்றியெல்லாம் நான் பேசவில்லை. என்னைப் பற்றி வரும் தகவல்களை பற்றி சொல்ல விரைவில் எனது வாழ்க்கையை புத்தகமாக விரைவில்வெளியிட இருக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணி ...

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் என மத்திய அமைச்சர் ...

ஜனநாயகத்தின் தாயாகம் இந்தியா

ஜனநாயகத்தின் தாயாகம்  இந்தியா இந்தியா, ஜனநாயகத்தின் தாயாக உள்ளதாகவும், பலசவால்களுக்கு மத்தியில் அதிவேகமாக ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற் ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது எல்விஎம் 3 - எம் 3 ராக்கெட் மூலம் ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 லிருந்து 140 ஆக உயர்வு தில்லி-தரம்சாலா-தில்லி இடையிலான முதலாவது இண்டிகோ விமானத்தை மத்திய தகவல் ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்த ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்திற்கான பிராணவாயு எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலில் உங்களை மீண்டும் ...

கோவிட் விழிப்புடன் இருக்க வேண் ...

கோவிட் விழிப்புடன்  இருக்க வேண்டும் கோவிட்-19, இன்ஃப்ளூயன்சா தடுப்புக்கான பொதுசுகாதார தயார் நிலை ...

மருத்துவ செய்திகள்

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...

சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ...

எலும்பு நைவு (OSTEOPOROSIS)

உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ...